| | 0 - கருத்துரை

வாழ்கை!!




வாழ்கையின் அழகு
வாழ்வதில் இருக்கு
வாழ்ந்து நீ பாரடா பூமியிலே

நிற்பதில் யாதும்
பயனிங்கு இல்லை
தேரதன் அழகு வீதியிலே

பூமி சுற்றிவர
வானம் மைதானம்
உன் வாழ்க்கை சுற்றிவர
நீதான் மைதானம்


நன்மை தீமை கொண்ட
வாழ்க்கை வாழ்ந்துவிடு
ஒன்றில் மற்றொன்று
முழுமையாகாது

தீதில் நன்மைகளும்
நன்றில் தீமைகளும்
பிறித்துப் பார்த்துவிடு
வாழ்வு உன்னோடு

பார்க்க அழகு அந்த
பூவும் காய்கனியும்
புதைந்த வேரை மரம்
மறப்பதுண்டோ

முன்பு கடந்து வந்த
பாதை மறந்துவிட
இன்று வாழும் வாழ்வில்
ஒரு பயனுமுண்டோ

| | 0 - கருத்துரை

ஆதாம் கவிதைகள் - புலனடக்கம் !!

| | 0 - கருத்துரை

ருத்ர வீணை - கம் பேக் !!!

காதல் தேசம் படத்தில் வரும் என்னை காணவில்லையே நேற்றோடு” என்ற பாடலின் ராகத்தில் இந்த கவிதையை படியுங்கள்ரசிக்கலாம்.

பல்லவி

கண்ணில் காதல் கேட்கிறேன் இப்போது
முள்ளின் முனையில் நிற்க்கிறேன் நெஞ்சோடு
ஒரு வார்த்தை கேட்க்காமல் உயிர் வாடும் - கண்ணே ....

வலியோடு வாழ்கையை கொடுக்காதே
கண்ணனை இமைகள் என்றுமே வெறுக்காதே
உன்னை கண்டபோது நான் தொலைந்தேனே - கண்ணே ...

நெஞ்சுக்குள் பூகம்பம் .. உன்னாலே...
வா வா என் கண் முன்னே
பூவில் நீ தேன் தானே .. ( கண்ணில் காதல் )

சரணம் - 1

காற்றாக நான் வாழ்வேன் நீ வந்த்து நின்றால்
உன்னோடு பிரியா நிலையாவேன்

தீயாக நான் வாழ்வேன் நீ என்னில் என்றால்
சுடராக மாறி ஒளியாவேன்

என்னுள்ளில் உனைத்தானே எப்போதும் பார்த்தேன்
நான் மாறி வெகுனாளாய் நீயாக ஆனேன்
என்னோடு காதல் சொல்லிவிடு....... ( கண்ணில் காதல் )

சரணம் - 2

முத்தங்கள் எப்போதும் சத்தம் வராமல்
நெஞ்சோடு வைக்கும் ஒன்றாகும்

அலைவந்து தீண்டாமல் கரைகள் இராது
தீண்டல்கள் பாவம் ஆகாது

சாகாமல் எனைக்கொல்லும் வானத்துப் பூவே
நீயின்றி வாழ்வாகும் ஒரு காதல் தீவே
என்னோடு ஒன்றாய் கலந்துவிடு....... ( கண்ணில் காதல் )

| | 4 - கருத்துரை

பாட்டு இங்கே - மெட்டு எங்கே (1)

இது உங்களை இசையமைப்பாளராக்கும் ஒரு சிறு முயர்சிதான். பாட்டுக்கு மெட்டு போடுவது கொஞ்சம் கடினமான காரியம்.  இதோ பாட்டு, எங்கே உங்கள் மெட்டு ???!!!!

பல்லவி 


ஊத்திக்கொடு மச்சான்
ஊத்திக்கொடு மச்சான்
ஊருகாய கொஞ்சம் சேத்துக்கடிடா


சேத்து வெச்சேன் கவலை
தீத்துப்புட்டான் சகலை - இவன்
குவாட்டருக்கு பொறந்த தெய்வமகன்டா


சேர்ந்து குடிச்சி போவோமே நாங்க
ஊருக்குள்ள தேரு போலத்தான்
மயங்கி விழுந்து மல்லாக்க படுப்போம்
சூரியன் விழிப்பான் எங்க மூஞ்சிலத்தான்


சரணம் - 1


காலையில் தினமும் கால் பாட்டில் அடிச்சா
நாளெள்லாம் இருக்கும் ரொம்ப லைட்டா
மாலை மயங்கும் மப்பு ஏற குடிச்சா
ராவெல்லாம் இருக்கும் செம்ம டைட்டா


கை நெறையா காசு இருந்தா
கவர்ச்சி பாரு இருக்குது
கொஞ்சம் கஷ்டமாயி போச்சுதுன்னா
கவர்மெண்ட் கடை இருக்குது


கட்டிங் அடிச்சி கொத்து உட்டா
வருது பாரு வாந்தி
பிட்டிங் இல்லா வாழ்கை மாறும்
கரைய சேரு நீந்தி
(ஊத்திக்கொடு மச்சான்)


சரணம் - 2


ஓசியில ஊத்திகிட்டா ஒன்னாம் பெக்குல ஜோரு
கடைசியில பில்லு வந்தா பிச்சிகிட்டு ஓடு
ராசியில்லா குடிமகனாய் நீ இருந்த பாரு
எம்சி தந்த வாழ்கையில அதயே தினம் நாடு


ஃபுல்லு கூட பீரு சேர்ந்தா 
அப்போதைக்கு அப்பீட்டு
கள்ளு குடிச்சி போதை வந்தா 
எப்பவுமே ரிப்பீட்டு


முழு பாட்டில் வாங்கி வெச்சு
மூடி சிக்குனா போச்சு
வாழ்கைய நீ வாழ்ந்து காட்டு
சும்மா என்ன பேச்சு
(ஊத்திக்கொடு மச்சான்)

| | 0 - கருத்துரை

ஆறாம் அறிவு



தலைநிமிர்ந்து நிற்க்கும்
மெழுகுவர்த்திச் சுடரின்
அடர்ந்த ஜுவாலையின்
நடுவில் கொண்டுபோய்
கைவிரலை வைத்ததும்தான்
உரைத்தது எனக்கு
மனிதன் மட்டும்
சொல்லிக் கொண்டிருக்கும்
நாய்களாள் இதுவரை
ஏறுக்கொள்ளப் படாத
அறாம் அறிவு
உயர்தினைக்கு சாபம் !!