| | 0 - கருத்துரை

பலாபட்டறை அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்து !!!

இன்று 10 வது திருமணநாள் கொண்டாடும்
பலாபட்டறை (ஷங்கர்) மற்றும் அவர் துனைவி
பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டும்

ருத்ர வீணை
(செந்தில்)

PS : இப்படியாவது கொஞ்சம் followers புடிக்க்கலாம்னு ஒரு நப்பாசை !!!

| | 1 - கருத்துரை

ருத்ர வீணையின் : காதல் ராகம்

         



        சாகா வரம் 

தீண்டல்களின் இன்பத்தை
தீயிடம் சொல்லிகொண்டிருந்தது
என் காதல் (கடிதம்) காகிதம்
கருகிக்கொண்டிருப்பதால் 
எனக்கும் கிடைத்தது - சாகா வரம்




      மீண்டும் காதல்

நாட்களின் ஓட்டத்தில்
நினைவுகள் மட்டும்
பின்தங்கின
பிரிந்துவிடுவோம் என்று
நீ கொடுத்த முத்தத்தில்
என் மனதில்
மீண்டும் காதல்

    

      ஏவாளிடம் சொல்லாததால்

இரவின் விளிம்பில்
வெளிச்சத்தின் கறை
கனவின் கண்கள்
மூடிய பொழுது
ஏவாளிடம் சொல்லாததால்
பலிக்கவில்லை என்
பகல் கனவு


       

| | 2 - கருத்துரை

ருத்ர வீணை RETURNS - வந்துட்டோம்ல !!!




ஆனாலும் இந்த சாப்ட்வேர் கம்பெனிகாரனுங்க தொல்ல தாங்க முடியல. அவனுங்க லீவ்ல போனா யாரும் தொல்ல பண்ணகூடாதாம். அப்படியே தப்பி தவறி ( அவனுங்க சொன்னத செய்யதான் ) கூப்பிட்டா ஒரு வாய்ஸ் மெயில் போட்டுட்டு நிம்மதியா இருப்பானுங்க. அதே கதை நம்ம கிட்ட பலிக்காது. நாம "எப்பவாவது"  லீவு கீவுனு  போய்ட்டா போதும், நம்ம மேனேஜர், வீட்டு போன்ல கூப்ட்டு (.. அவ்வ்வ்வ்வ்.. ), அவசரம்னு சொல்லி நம்மள தூக்கலேர்ந்து எழுப்பி வேலைசெய்ய சொல்றானுங்க.

என்னடா இவன் இப்படி பொலம்பரானேனு பாக்கறீங்களா.. இப்படிதான் ரெண்டு மாசமா ப்ராஜெக்ட் go-live னு( போகும் உயிர் .. என்னமா synch ஆவுது ) சொல்லி உயிரை வாங்கிட்டானுங்க. நானும் போனா போகுதுனு விட்டுட்டேன்..
ஏன்னா ப்ராஜெக்ட் முடியும்போது நீ ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்லிட்டனுங்க..

திரும்பி வந்து (படைப்பு) குதிரைய ஓட்டி பாத்ததுல வந்தது


          வேலை


விளக்கின் விளிம்பில்
விட்டில் பூச்சியாய் 
பறக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல்