| | 1 - கருத்துரை

வாழ்கை போட்டியில்தான் தொடங்கும்...



போட்டியில் தொடங்கும் வாழ்க்கை
ஜெயிப்பது மட்டும் குறிக்கோள்
தேவையென்றால் பறித்துக்கொள்
சொல்லிதரப்படாத பாடம்
நல்லதுக்காக பொய் சொல்
நீ செய்வது எல்லாம் நல்லவை
முதல் காதல் மறக்காது
இரண்டாம் காதலியை மறந்துவிடு
சீக்கிரம் மணந்துகொள்
காதல் எதிரியானால் தோற்றுப்போவாய்
சொல்வதற்கெல்லாம் தலையாட்டு
புதிய பழக்கங்கள் வழக்கமாகும்
கிழக்கில் தான் வெளிச்சம்
உனக்கு அது ஒன்றுதான் திசை
கையில் கிடைக்கும்வரை காத்திரு
கிடைப்பது உனக்காக தீர்மானிக்கப்பட்டது
சில சமயம் நீ ராஜா
யாரிடம் தோற்றுப்போனாலும் ராணி உனக்குத்தான்
பழையது வேண்டாம் உனக்கு
நீ விரும்பும் பழையது
எப்போதோ புதியதாக்கப்பட்டுவிட்டது
இன்று இரவை என்றும் நினை
நாளை பகல் உனக்கு இல்லாமல் போகலாம்
தோற்றுவிட்டோம் என்று சோர்ந்துவிடதே
மீண்டும் உன் வாழ்கை போட்டியில்தான் தொடங்கும்...

| | 1 - கருத்துரை

காற்று வரும்



துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளை
திரையிட்டு மறைத்து வைத்த போது
நீண்டு வளர்ந்த நகம் ஒன்று வருடியதால்
கிழிந்த கண்ணாடிச் சேலையில் விழுந்த
ஓட்டை ஊடகமாய் மாறிக்கொண்டு
உலக வெப்பமயமாக்கலுக்கு எனக்கான பங்களிப்பை
உலகிற்கு கொண்டுசென்ற நேரத்தில்
மெய் சிலிர்த்து உணர்த்தியது
என்றைக்கும் உனக்காக வரும் காற்று..

| | 1 - கருத்துரை

நீ கடவுளா ?



விரலின் கீழ் நுனியில் சிக்கிக்கொண்டிருந்த
மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த
அந்த நான்கெழுத்து வார்த்தை
தினமும் என்னை எனக்கே
ஞாபகப்படுத்திக்கொண்டிருந்ததது - ஏனென்றால்
அது - நானும் ஒரு நாள் அதுவாக மாறி
தீர்கதரிசனத்தை தரும்போது
எழும் கேள்விக்கான விடை - நீ கடவுளா ?

| | 6 - கருத்துரை

அது - எவனுக்கும் புரியாது !!


(2) இட்ட வரியை இரண்டு முறை படிக்கவும்

 தேடிகொண்டிருக்கும்போது கிடைத்தது
தேடுவது அல்ல தேடியது - என்று
கிடைத்ததை பார்க்கும் போது தெரிந்தது(2)
தெரிந்தது அல்ல தெரியாதது - என்று
தெரிந்ததை சொல்லும் போது புரிந்தது(2)
புரிவது அல்ல புரியாதது - என்று
புரிந்ததை பார்க்கும் போது தெளிந்தது(2)
தேடிக்கிடைத்தை தெரிந்து சொல்லும்போது
அது - எவனுக்கும் புரியாது என்று !!

| | 2 - கருத்துரை

என்னை மன்னிச்சிடுங்க .. ப்ளீஸ்


முக பிம்பத்தின் பிரதி நகலும்
தவறுதலாய் காட்டிய கண்ணாடியின்
தலைகீழ் உருவத்தை நேராக பார்த்துக்கொண்டே
பின்னோக்கி முன்னேற ஆயத்தமான பொழுதில்
முன்னோக்கி பின்னால் வந்த உன்னை
கண்நோக்காமல் இடித்த நேரம்
விண்ணோக்கி உயர்ந்த இதய துடிப்பில்
நுனி நாக்கை கடித்துக்கொண்ட நீ
கூறிய அந்த மூன்று வார்த்தை