| | 1 - கருத்துரை

அதாம் கவிதைகள் - 2





இரவின் மௌன இரைச்சல்
மெதுவாய் தூக்கம் கலைக்கும்
விழியின் வழி வெப்பம்
புவியின் நிலை மாற்றம்
விளைவில் ஒரு நிகழ்வு
முதலில் வரும் உணர்வு
தினமும் இது தொடர்ந்தால்
புல்வெளியில் பனி படர்ந்தால்
வினவும் மறுகணமே
சரியென்றது மனமே
தொடரும் முடிவுரைக்கும்
சில மயக்கங்களின் விருப்பம்

| | 3 - கருத்துரை

ஆதாம் கவிதைகள் - 1



கண்கள் தொலைந்து போக
மை திருடிய இரவு
நாய்களின் நகர்வலத்தை
நிசப்தம் தேடும் நேரம்
கூடுகள் தாவித்தாவி
ஓய்ந்து போன பேய்கள்
எதிர் நோக்கா
திமிர் எண்ணம்
அதிர்வலையின் புதிர்
புணர்வது என் புத்தி
முதல் மயக்கம் முடிந்ததுவே
பலமயக்கம் தொடங்கிடவே !!