| | 0 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 3





"சார், நான் முனியப்பா பேசுது சார். இன்னா ஆச்சுங்க சார். வரலியா?" என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றாலும், முனியப்பாவை எப்படியாவது சமாளிக்க வேண்டும். 

சொல்லியிருந்தபடி நாங்கள் போகாததால் எனக்கு இந்த தண்டனை. அந்த வீட்டை பேசி முடிப்பதற்கு, இவனிடம் பேசி சமாளிப்பது எவ்வளவோ மேல்.

"இல்ல சார். இப்போ கொஞ்சம் ப்ராப்ளம். அதான் வர முடியல. வி வில் ஸீ நெக்ஸ்ட் டைம் சார்." என்று ஏதோ மழுப்பினேன்.

"சார், மனி ப்ராப்ளம்னா சொல்லுங்கோ சார். நம்ம பேங்க்தான். ஈஸியா மாடிகொட்த்தினி சார்".

"இல்ல சார். சாரி, ஐ வில் கால் யு நெக்ஸ்ட் டைம்." என்று போனை வைத்துவிட்டேன். அடுத்தடுத்து வந்த அவனது போன் கால்களை எடுக்கவே இல்லை.

இப்படியே ஒரு இரண்டு வாரம் ஓடி இருக்கும். வாரக்கடைசியில் போய் வீடு தேடுவதை கொஞ்சம் நிறுத்திவைத்திருந்தேன். ஒரு திங்கட்கிழமை காலையில் வழக்கம் போல் மெதுவாக எழுந்து, 
குளித்து வருவதற்குள் மணி 11 தாண்டி இருந்தது. 

" அம்மா, கஞ்சி ரெடியா", என்று கேட்டுகொண்டே சமையற்கட்டில் நுழைய, அம்மாவை அங்கே காணவில்லை.

" பாட்டி அம்மாவ பாத்தியா"? என்று கேட்டுக்கொண்டே வாசலில் போய் பார்க்க, யாரோ ஒருவருடன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டு வருவது தெரிந்தது.

"கோவிலுக்கு போனாடா, இன்னும் வரல" என்று பாட்டி பின்னாடி வந்து நின்றாள்.

"இதோ வந்துட்டா பாட்டி. கூட யாரோ பேசிண்டு வரா, அதன் லேட்டாயிருக்கும்".

"பின்னாடி தெருல இருக்காளே அந்த மாமி மாதிரி இருக்கு. இப்போ கூட அவா புள்ளைக்கு கல்யாணம் ஆச்சே", என்று பாட்டி அவர்களின் புராணம் கூற, அதில் எனக்கு விருப்பம் இல்லாததால் 
உள்ளே சென்று விட்டேன்.

"என்னடா. கஞ்சி எடுத்துன்டியா. கொஞ்சம் லேட் ஆயிடுத்து." என்று அம்மா அவசரமாய் சமையற்கட்டில் நுழைய, நான் பின்னால் போய் "
யாரும்மா அது. புதுசா ஒரு ப்ரண்டா" என்று கிண்டல் செய்தேன்.

"இல்ல டா. ரொம்ப நாளா இந்த மாமி கோவிலுக்கு வருவா. இன்னிக்குதான் பேச சந்தர்ப்பம் கிடைச்சுது.
அவா புள்ளைக்கு இப்போதான் கல்யணம் ஆயிருக்கு, இங்க பக்கத்து தெருலதான் இருக்காளாம். அவன் கூட உன் கம்பெனில தான் வேல பாக்கறானாம்"

"அப்படியா, சரி எனக்கு கஞ்சி தா, பசிக்கறது" என்று சொல்லிவிட்டு, எப்போதும் போல் லேப்டாபில் உட்காரபோனேன், அவசரமாய் பின்னல் வந்த அம்மா, 
"டேய், முழுசா கேட்டுட்டுப் போ" என்று ஏதோ சொல்ல வந்தாள்.

"என்னம்மா, எனக்கு வேல இருக்கு. சீக்கிரம் சொல்லு " என்று வெறுப்புடன் கூறினேன். அவர்களின் கதையை மேலும் கேட்க எனக்கு விருப்பம் இல்லை.

"அவா இப்போ இருக்குற அபார்ட்மென்ட்ல ஒரு வீடு காலியா இருக்காம். வந்து பாக்கறேளானு கேட்டா" 

"நாளைக்கு போலாம் மா, இன்னைக்கு எனக்கு நிறைய வேல இருக்கும்மா"

"டேய், சும்மா எப்போபாத்தாலும் அதுலயேதான உக்காந்திருக்க. எழுந்து வா, இங்க தானே, போய் பாத்துட்டு வரலாம். நல்லா இருந்தா பாக்கலாம், இல்ல, புடிக்கலனா வந்துடலாம்"  
என்ற அம்மாவின் வார்த்தைக்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

"சரி வா போலாம்", என்றார் அரைமனதுடன் தயாரானேன்.

"மொதல்ல அந்த மாமியாதுக்கு போலாம், மாமி வந்து சாவி வாங்கித்தரேன்னு சொல்லிருக்கா"

"நான் மாமியாத்துகெல்லாம் வரல. நீவேனா போய் சாவி வாங்கிண்டு வா" என்று சொல்லிக்கொண்டே அவளது முகத்தை மட்டும் பார்த்தேன். திட்டு வாங்கபோவது மட்டும் உறுதி என்று 
தெரிந்தது.

நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்க்கு அருகில் என்பதால் நடந்தே போனோம். இந்த அபார்ட்மென்ட் கட்டத்தொடங்கும் போதெல்லாம், இப்படி ஒரு அபார்ட்மென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் 
என்று நாங்கள் சொல்லிகொள்வோம். நாங்கள் இருக்கும் அந்த காலனி ரொம்பவும் அமைதியானது. பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், என்று எல்லா இடத்திற்கும் பஸ் வசதி உண்டு. 
ஆகையால், இந்த இடத்தில் வீடு கிடைத்தால் அதில் எல்லாருக்கும் ரொம்பவும் சந்தோஷம்.

"என்னடா யோசிச்சிண்டு வர." என்ற அம்மாவின் கேள்வியில் கனவு கலைந்தேன்.

"இல்லம்மா, இந்த பிளாட் இப்போதானே கட்டினா. நம்ம கூட எவ்வளோ சொல்லுவோம். இந்த பிளாட் சூப்பரா இருக்கு, கிட்டயே இருக்குனு. அதத்தான் யோசிச்சிண்டு வந்தேன்".

"ஆமான்டா, நல்ல பிளாட். கிடைச்சா நல்லாத்தான் இருக்கு. யோகம் இருந்தா கிடைக்கும். இரு, நான் போய் மாமிய பாத்து கூட்டிண்டு வரேன்" என்று கூறி உள்ளே நுழைந்தாள். 
செக்யூரிட்டி குறுக்கிட்டதால், அவனிடம் அந்த மாமியின் பெயரை சொல்லவேண்டியதாயிற்று.

"வாப்பா, மேல வா. நீ கூட என் புள்ள வேல பாக்கற கம்பெனிலதான் இருக்கியாமே. அம்மா சொன்னா" என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கி வந்தாள் , அம்மா சொன்ன அந்த மாமி.

அதற்குள் நான் அந்த அபார்ட்மென்ட்டை நன்றாக ஆராய்ந்துவிட்டேன். நான்கு மாடிகள். அதிகபட்சம் 16 வீடுகளுக்குமேல் இருக்காது. ஜென்ரேடர் இருந்தாதால், லிப்ட் கண்டிப்பாக இருக்கும் 
என்று யூகித்து கொண்டேன். கீழே எல்லா கார்களும் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்தது. ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தது. இது கிடைத்தால் நன்றாக 
இருக்கும் என்று ஆசை தோன்ற ஆரம்பித்தது.

"இது ஒண்ணுதான் காலியா இருக்கு. உங்களுக்குதான் அதிஷ்டம்னு நினைக்கறேன்" என்று அந்த மாமி சொல்லிக்கொண்டு வருவதற்குள் இரண்டாவது மாடி வந்து விட்டது. லிப்டில் இருந்து இறங்கும் போதே 
அந்த அபார்ட்மென்ட் வீட்டின் கதவை திறந்து வைத்திருந்தான் செக்யூரிட்டி.

"வாங்கோ மாமி. நீங்க பாத்துண்டு இருங்கோ. நான் இப்போ வந்துடறேன்" என்று ஏதோ அவசர வேலையாய் அந்த மாமி கீழே போக, இதில் மட்டும் என்ன புதுசா இருக்கப்போது என்று 
எண்ணிக்கொண்டே, உள்ளே சென்று நிமிர்ந்து பார்த்த எனக்கு ஆச்சர்யம்.

தொடரும்...

| | 1 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 2



"இன்னா சார், மனே சென்னாகித்தா?", முழுவதுமாய் பார்த்து முடித்த பின்னர் அவன் எங்களிடம் கேட்ட வார்த்தை. நாங்கள் இதுவரையில் பார்த்த அபார்ட்மென்ட் வீடுகளில் இது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது.

"நல்லா இருக்கு சார்", என்று பொய் கூறினேன். எனக்கு என்னவோ பரவாயில்லை என்று தான் தோன்றியது. அனால் அப்பாவுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று மட்டும் புரிந்தது.

"என்னப்பா, எப்படி இருக்கு. உனக்கு புடிச்சிருக்கா?".

"நல்லா இருக்கு டா. கொஞ்சம் சின்னது தான். ஆனாலும் நல்ல களையா இருக்கு. அதுமட்டும் இல்லாம, பஸ் ஸ்டான்ட் வேற பக்கத்துலையே இருக்கு. எதாவது ஆத்தர அவசரம்னா, சௌகரியமா இருக்கும்", என்று அப்பாவின் எண்ணங்கள் பரந்து விரிவதை என்னால் யூகிக்க முடிந்தது.

"சரிப்பா, அதுக்காக பாத்தோம்னா, அஞ்சு மாடி ஏறனுமே. பாட்டிக்கு ரொம்ப கஷ்டம் பா, அவ சும்மாவே வீட்டுக்குள்ள இருக்க மாட்டா. இதுல தினமும் அஞ்சு மாடி ஏறி இறங்கனும்னா, ரொம்ப கஷ்டம் பா. எனக்கு என்னவோ கொஞ்சம் யோசிச்சி பண்ணலாம்னு தோணுது".
நாங்கள் பேசிகொண்டிருப்பதை கேட்ட முனியப்பா, " சார், 24 ஹவர்ஸ் லிப்ட் இதே சார். ஏன்னு டென்ஷன் இல்லா சார்" என்றான்.
" லிப்ட எப்படிங்க நம்பறது. திடீர்னு எதாவது ப்ராப்ளம்னா, கஷ்டம் ஆயிடும் சார்".
" டேய், இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லி, வேண்டாம்னு சொல்லாதடா, அம்மாவை கூட்டிட்டு வந்து பாக்கலாம்", என்று அப்பா கூறியதும்,எனக்கு சிறிது பயம். எங்கே இந்த வீட்டையே முடித்துவிடலாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் தான். அப்படி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வீடு இல்லை என்பதால், என் மனதில் சிறு நெருடல் இருந்தது.
" இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு தோணுது" என்பதற்குள், முனியப்பா வந்து ஏதோ கன்னடத்தில் பேச ஆரம்பித்தான். அங்கிருந்து அப்பாவை எப்படியாவது கூட்டிகொண்டு போகவேண்டும் என்பதால்

" சரி சார், நாளைக்கு அம்மாவை கூட்டிட்டு வரோம். அவங்கதான் வீட்ல இருக்க போறாங்க. அவங்களுக்கும் புடிக்கனும்னு பாக்கறேன்." என்று சொல்லி, படிக்கெட்டில் இறங்க, முனியப்பா பின்னாடி ஓடி வந்து, " சார், பிளகே ஹத்து கன்டகே பன்னி சார்", என்று சொன்னவனிடம், சரி என்பதுபோல் மண்டையை ஆட்டிவிட்டு, காரை கிளப்பினேன். எப்போதும் முதல் கியர் விழுந்ததும் நின்றுவிடும் எனது கார், அப்போது மட்டும் விர்ர்ர் என கிளம்பியது.

"என்னடா, வீடு எப்படி இருக்கு " என்று அம்மா வாசலிலேயே கேட்டுக்கொண்டு நின்றாள்.
"பரவாயில்லைமா, கொஞ்சம் யோசிச்சி முடிவு எடுக்கணும்னு தோன்றது".
"சும்மா இருடா. அவளும் பாக்கட்டுமே. அதுக்குள்ள அவள மூட் அவுட் பண்ணாத" என்று அப்பா என்னை அதட்டிவிட்டு, அம்மாவிடம், " நாளைக்கு வரோம்னு சொல்லிட்டு வந்திருக்கோம்மா. காலைல பத்து மணிக்கு எல்லாரும் போய் பாக்கலாம்", என்று அவளின் ஆசையையும் கொஞ்சம் தூண்டி விட்டார் அப்பா.

இவர்கள் பேசுவதை பார்த்தால் நாளைக்கு பேசி முடித்து விடுவார்கள் என்று தோன்றியது. அப்படி ஆகாது. ஏனென்றால் அம்மா அவ்வளவு சீக்கிரம் எதையும் சரி என்று சொல்லிவிடமாட்டாள்..
அந்த தைரியத்தில் பலதும் மனதில் ஓடிகொண்டிருக்க

"சீக்கிரம் மூஞ்சி அலம்பிண்டு வாடா, காரக்கொழம்பும் உருளகிழங்கும் பண்ணிருக்கேன். பாட்டிக்கும் பசிக்கரதுன்னு சொன்னா. இதெல்லாம் அப்பறமா பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு அம்மா அவளது வேலையை பார்க்க சென்றாள்.

எப்படியும் சாப்பிடும் போது இதைதான் பேசப்போகிறோம் என்று எனக்கு தெரியும். அதனால்தான் நான் விஷயத்தை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தேன்.

"அம்மா ஆபீஸ்ல நேத்து ஒருத்தர் கூட பேசினேன்மா. இங்க ஜிகினி பக்கத்துல காலி பிளாட் எல்லாம் கம்மி விலைல கிடைக்குதாம்மா. சொந்த வீடு கட்டி போனா சூப்பரரா இருக்கும் இல்ல".
ஆமாம்,  சொந்த வீடு கட்டிக்கொண்டு போக வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் கனவு.

"என்னடா சொல்ற. எவ்வளோ சொல்றாளாம்" என்று அம்மா ஆர்வத்துடன் கேட்டாள். இது போதும் எனக்கு, இப்போது பார்த்துவிட்டு வந்த வீட்டை கைகழுவுவதர்க்கு.

தொடரும்...

| | 5 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 1



"அப்பா.. இன்னிக்கு கார்த்தால ஒருத்தன் போன் பண்ணிருந்தான்பா. கோட்டிகேரி பக்கத்துல ஒரு அபார்ட்மென்ட் இருக்குன்னு சொன்னான். எனக்கு என்னவோ அது நல்ல ஏரியானு தோணுது. சும்மா போய் பாத்துட்டு வரலாமா ?"

"அட போடா. நாமளும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையானா இதே பொழப்பா அலையறோம். ஒரு அபார்ட்மென்ட்டாவது நல்லா இருக்கா, ஹால்லயே பாத்ரூம்.. இல்லைனா கிட்சன் ரொம்ப சின்னது, எல்லாம் சரியா இருந்தா, இந்த பாங்க்லதான் லோன் வாங்கனும்னு சொல்றான். அவன் சொல்ற பாங்க்ல லோன் ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. ஏற்கனவே இங்க வாய்க்கும் வயிதுக்கும் இடிக்குது. இதுல லோன் வேற போட்டாச்சுன்னா, கடன் வாங்குனா கூட பத்தாது. நம்மளால எல்லாம் பெங்களூர்ல வீடு வாங்க முடியாது. நீ வேற வேலை இருந்தா போய் பாரு", என்ற அப்பாவின் கவலையிலும் ஒரு ஞாயம் இருந்தது. எல்லாருக்கும் புடிச்சாமதிரி ஒரு வீடு அமையறது அவ்வளவு ஈஸி இல்ல. அதுவும் அபார்ட்மென்ட் வாங்கனும்ன எவ்வளவு விஷயம் பாக்கவேண்டியிருக்கு. 

"அப்படி சொல்லாதப்பா. என்னதான் கட்டிருக்கான்னு போய் பாத்துட்டு வந்துரலாம். நீ சீக்கிரம் போய் ரெடியாகு. நான் போய் வண்டிய வெளில எடுக்கறேன்." என்று கூறிவிட்டு அம்மாவை பார்த்து,
"அம்மா வரியா?", என்றேன். இல்லை என்றுதான் சொல்வாள் என்று தெரிந்தும், நான் அம்மாவை கூப்பிடுவேன். ஏனோ அது எனக்கு பழகிப் போய்விட்டது.

"இல்லடா. நீயும் அப்பாவும் போயிட்டு வாங்க. உன்னக்கு புடிச்சிருந்தா அப்பறமா நான் வரேன்". ஆமாம், அம்மாவுக்கு புடிச்சிருந்தா அது எனக்கு புடிச்சிருக்கும். அது மாதிரி தான் அம்மாவுக்கும்.

"சரிம்மா. போய்ட்டுவறோம்". என்று வண்டியை எடுக்க, அது, முதல் கியர் விழுந்ததும் நின்றுவிட்டது. எப்படியோ சமாளித்து காரை ஓட்டிக்கொண்டு ,அந்த அட்ரஸில் போய் நிறுத்தினேன்.

"பன்னி சார். கார் அல்லி பார்க் மாடிபிடி". வெளியே நின்றிருந்த செக்யூரிட்டி பேசிய கன்னடம் எனக்கு ஓரளவுக்கு புரிந்ததால்,அவன் சொன்ன இடத்தில காரை பார்க் செய்துவிட்டு வந்தேன்.

" சார், இல்லி ஒந்து என்ட்ரி மாடி சார்.", மறுபடியும் கன்னடம். என்ட்ரி என்ற வார்த்தை கேட்டவுடன், ஓரளவு புரிந்தது.

"முனியப்பா இதாரா ?", எனக்கு தெரிந்த கன்னட வார்த்தையில் அந்த செக்யூரிட்டியிடம் கேட்டேன், அவன் கொடுத்த புத்தகத்தில் எழுதிக்கொண்டே.

" மேல்கடே இதாரே சார். நீவு இல்லி ஓகி", என்று அவன் காட்டிய படிக்கட்டில் ஏறிக்கொண்டே, "பாத்து வாப்பா" என்று என் அப்பாவை எச்சரித்தேன். கட்டி முடிக்கப்படாத கட்டிடம் என்பதால் எங்கும் கம்பிகள் சிதறி கிடந்தன. ஒரு வழியாய் மூன்று மாடிகள் ஏறி, மூச்சு வாங்க நின்றோம்.

போனில் யாரிடமோ பேசிகொண்டிருந்த முனியப்பா எங்களை பார்த்து, " ஒந்து நிமிஷா சார், பர்தினி" , என்றான்.

" பரவால்ல சார். நாங்க வெயிட் பண்றோம்" , என்று சொல்லிவிட்டு, அந்த அபார்ட்மென்ட் வீட்டின் கதவுக்கான பகுதியை பார்க்க சென்றேன்.

" சார், கன்னடா பருத்தா", என்று கேட்டவனிடம் , " இல்ல சார், நாங்க தமிழ்" என்று கூற, அவன் " பரவாகில்லா சார், எனக்கு கொஞ்சம் தமில் வருது" என்றான். வந்த தமிழை பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.

" இங்கே வாங்கோ சார். இந்த லாஸ்ட் பிளாட் தான்" என்று, எங்களுக்காக அவன் பார்த்து வைத்திருந்த அபார்ட்மென்ட் வீட்டை காண்பித்தான்.

" சார், நீவு ஹெசுறு ஏன்னு", என்றவனிடம் ஒன்றும் புரியாமல் நான் விழிக்க, அவன் செந்தமிழில் என்னிடம் " பேரு சொல்லுங்க சார்" என்றான்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்பது போல், இப்படி யாரவது கேட்டல், உடனே பர்சில் இருந்து விசிடிங் கார்டை எடுத்து கொடுத்துவிடுவேன். 

நீட்டிய கார்டை வாங்கி பாக்கெட்டில் போட்டுகொண்டு, " உங்க கம்பெனிலே எரடு பேரு இங்க பிளாட் புக் பண்ணிகிராங்கோ சார்", என்று ஒரு கதையை சொன்னான். 

சரி என்பது போல் மண்டையை ஆட்டிவிட்டு, " உள்ள பாக்கலாமா" என்றேன்.

"பன்னி சார். சக்கத் பிளாட் சார், நிம்கி தும்பா இஷ்டாகுத்தே சார்" என்று கன்னடத்தில் பேச, நாங்கள் அவன் பின்னல் போனோம். 

சார் சார் என்று அவன் குழைவதை பார்த்து எனக்கு சிறியதாய்  ஒரு சந்தேகம் தோன்றியது. என்னதான் இருக்குன்னு பாப்போம் என்பது போல் அப்பா கண் அசைக்க, சொந்தமில்லாத வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தேன்.

தொடரும் ...