| |

ருத்ர வீணையின் : காதல் ராகம்

         



        சாகா வரம் 

தீண்டல்களின் இன்பத்தை
தீயிடம் சொல்லிகொண்டிருந்தது
என் காதல் (கடிதம்) காகிதம்
கருகிக்கொண்டிருப்பதால் 
எனக்கும் கிடைத்தது - சாகா வரம்




      மீண்டும் காதல்

நாட்களின் ஓட்டத்தில்
நினைவுகள் மட்டும்
பின்தங்கின
பிரிந்துவிடுவோம் என்று
நீ கொடுத்த முத்தத்தில்
என் மனதில்
மீண்டும் காதல்

    

      ஏவாளிடம் சொல்லாததால்

இரவின் விளிம்பில்
வெளிச்சத்தின் கறை
கனவின் கண்கள்
மூடிய பொழுது
ஏவாளிடம் சொல்லாததால்
பலிக்கவில்லை என்
பகல் கனவு


       

1 - கருத்துரை:

அண்ணாமலையான் said...

கலக்குறீங்க... ருத்ரவீணை