| |

அதாம் கவிதைகள் - 2





இரவின் மௌன இரைச்சல்
மெதுவாய் தூக்கம் கலைக்கும்
விழியின் வழி வெப்பம்
புவியின் நிலை மாற்றம்
விளைவில் ஒரு நிகழ்வு
முதலில் வரும் உணர்வு
தினமும் இது தொடர்ந்தால்
புல்வெளியில் பனி படர்ந்தால்
வினவும் மறுகணமே
சரியென்றது மனமே
தொடரும் முடிவுரைக்கும்
சில மயக்கங்களின் விருப்பம்

1 - கருத்துரை:

அண்ணாமலை..!! said...

அருமையான வார்த்தைக்கோர்வைகளும்..
சொல்லாடல்களும்..
வாழ்த்துகள் நண்பரே!
ஆனால், சற்றே ஆழ்ந்து படித்தால்தான் புரிவதால் மக்கள் தவிர்த்துவிட வாய்ப்புள்ளது.சற்று வெளியிலேயே பொருள்விளங்கும்படி கவிதை எழுதினால் இன்னும் அதிக மக்களைச் சென்றடையும் என்பது என் தாழ்மையாக கருத்து!
(எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!:)