| | 1 - கருத்துரை

ஒதுக்கப்பட்டவள்

"உப்புமடச் சந்தி" என்ற இணையபக்கத்தில் வந்த படக்கவிதை இடுகைக்கு என்னுடைய படைப்பு

http://santhyilnaam.blogspot.com/2009/12/blog-post.html

சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்

பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்

பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்

தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்

தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை

நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு

நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...

| | 1 - கருத்துரை

நண்பனே நீ எங்கு சென்றாய் ???

" வாணியின் கவிதைகள் " இணையப்பக்கத்தில் இடம்பெற்ற ஒரு பதிவிற்கான பதில் கவிதை..( கொஞ்சம் ஓவரா போறேன்னா இப்போவே சொல்லுங்க .. ப்ளீஸ்..)

http://vaninathan.blogspot.com/2009/12/blog-post_29.html

தெரியாத காற்றில் பழகிய வாசம்
புரியாத கவிதையில் தெரிந்த எழுத்துக்கள்
அறியாத பொருளிலும் ஆசை கொள்ளும் மனம்
கலையாத கனவிலும் கண்ணோட்டமிடும்
எனக்கான நண்பனே
நீ எங்கு சென்றாய் ???

| | 3 - கருத்துரை

பாடம் படித்தேன்




செவ்வனே கலைத்து வைக்கப்பட்டிருந்ததில்
எனக்கான காகிதத்தை எடுத்துக்கொண்டு
ஏற்கனவே பதிக்கபட்ட காலடிக்குள்
என்னிரு கால்களை பொருத்திகொண்டேன்

பதிக்கப்பட்ட காலடிக்கான அதிஷ்டம்
என் பாத சனியோடு சேர்ந்துகொண்டது
ஓயாமல் எனக்குள்ளே தன்நம்பிக்கை
தலைவிரிகோலமாய் தாண்டவம் ஆடியது

நீங்கி செல்ல பயம் என்றது - என்
ஆமை மனது
கடைசியில் நான் - வேறுவழியின்றி
நோட்டங்கள் நிறைந்த பார்வையினூடே

கையில் இருந்ததை நீட்டினேன்

தன்மானம் காக்கும் அறிவுகள்
தளர்ந்து விட்டது -  ஆகையால்
நீட்டிய கையை மடக்காமல் நின்றுகொண்டிருந்தேன்

மிக நாட்களாக பொழுதுபோக்கு களமாகியிருந்த
எனக்கான போர்க்களத்தில் - இன்றையதினம்
ஆச்சரியமாக - அமைதியாக இருந்தது

வெகுவாக இந்நேரம் கணைகள் - என்
பின் மூளையில் மொய்த்திருக்கும் - என்று
யோசித்ததில் நான் அதிசயித்தேன் - அதற்க்குள்
ஒரு கணை முன்னே வந்து முட்டியது

தவறான வரிசையில் நின்றமைக்கு வருந்துகிறோம் - என்று
அசாராதனமாய் கூறியதில் நான் புரிந்துகொண்டது
சரியான வரிசையில் நிற்க
தவறான பாடத்தை படித்துவிட்டேன்..

| | 1 - கருத்துரை

மரக்கட்டில்





அவனும் அவளும்
அதிஷ்ட தம்பதிகள்
மரக்கட்டிலின்
ஒரு முனையில் - அவன் பெயர்
மறு முனையில் - அவள் பெயர்
நடுவில்
பேனாவால் அவர்கள் செதுக்கிய இதயம்

| | 0 - கருத்துரை

தோட்டக்கலை



எங்கள் வீட்டு கணிணியில்
தோட்டக்கலை பயிற்சி
எலி மருந்து செலவு
முற்றிலும் இலவசம்...