| |

பாடம் படித்தேன்




செவ்வனே கலைத்து வைக்கப்பட்டிருந்ததில்
எனக்கான காகிதத்தை எடுத்துக்கொண்டு
ஏற்கனவே பதிக்கபட்ட காலடிக்குள்
என்னிரு கால்களை பொருத்திகொண்டேன்

பதிக்கப்பட்ட காலடிக்கான அதிஷ்டம்
என் பாத சனியோடு சேர்ந்துகொண்டது
ஓயாமல் எனக்குள்ளே தன்நம்பிக்கை
தலைவிரிகோலமாய் தாண்டவம் ஆடியது

நீங்கி செல்ல பயம் என்றது - என்
ஆமை மனது
கடைசியில் நான் - வேறுவழியின்றி
நோட்டங்கள் நிறைந்த பார்வையினூடே

கையில் இருந்ததை நீட்டினேன்

தன்மானம் காக்கும் அறிவுகள்
தளர்ந்து விட்டது -  ஆகையால்
நீட்டிய கையை மடக்காமல் நின்றுகொண்டிருந்தேன்

மிக நாட்களாக பொழுதுபோக்கு களமாகியிருந்த
எனக்கான போர்க்களத்தில் - இன்றையதினம்
ஆச்சரியமாக - அமைதியாக இருந்தது

வெகுவாக இந்நேரம் கணைகள் - என்
பின் மூளையில் மொய்த்திருக்கும் - என்று
யோசித்ததில் நான் அதிசயித்தேன் - அதற்க்குள்
ஒரு கணை முன்னே வந்து முட்டியது

தவறான வரிசையில் நின்றமைக்கு வருந்துகிறோம் - என்று
அசாராதனமாய் கூறியதில் நான் புரிந்துகொண்டது
சரியான வரிசையில் நிற்க
தவறான பாடத்தை படித்துவிட்டேன்..

3 - கருத்துரை:

பா.ராஜாராம் said...

வாங்க வாங்க.

வரும்போதே மிக அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க.

கலக்குங்க!

அண்ணாமலையான் said...

சரியான வரிசையில் நிற்க
தவறான பாடத்தை படித்துவிட்டேன்.. ம்ம்ம்ம்ம்

Paleo God said...

பா.ராஜாராம் said...
வாங்க வாங்க.

வரும்போதே மிக அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க.

கலக்குங்க!//

பா ரா வே சொல்லிட்டாரு... "வீணை" மீட்டிகிட்டே இருங்க.. .தேனமுதாய்... வருக வருக வளர்க.!!