| |

இதுவும் ஒரு காதல் க(வி)தை


 
 
காதலின் எல்லை ஆரம்பம்
கனவுகளின் நினைவுகளை சுமந்து கொண்டு நுழைந்தேன்
முயற்சிகளில் வெற்றிபெறும் மனிதன்
முழுமையான மகிழ்ச்சியை உணர்கிறான்
அதுவும் – காதலுக்கான முயற்சியென்றால்
நடப்பவை இவைகளாகத்தான் இருக்கமுடியும்
கண் இமைத்தல் மறந்து போகும்
செவிகள் கூட மடுத்து போகும்
நட்ப்புறவும் நல்லிசையும் நான்கு காதை தூரம் போகும்
தேனமுதும் திகட்டிவிடும்
தீக்கிறையாய் தேகம் சுடும்
வானகமும் வையகமும் காதல் தூதென்றாகும்
பூவழகும் புனலழகும் புதுமையென கண்விறியும்
பாவம் இந்த இதயம் மட்டும் பகலிரவை மறந்திருக்கும்
நாம் மட்டும் உணரும் அந்த நிலநடுக்கம் வந்துவிடும்
ஒத்திகைகள் முடித்துவிட நொடிகள் கூட நீளமாகும்
இத்தனைக்கும் மேல் இந்த காதலன்றாகிவிடும்
முள்ளின் முனையில் நின்றுகொண்டு
தேவதைகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்
மெதுவாக முள் தைத்துக்கொண்டிருந்தது…
முழுவதுமாய் தைத்துவிட்டப்பிறகுதான் உணர்ந்தேன்
முள் தைத்த இடம் இதயம் என்று..
துளிர்விட்ட இலை கூட
தென்றலுக்காக ஏங்குகிற காலமிது
பாவம் என் இதயம் – மூச்சு காற்றுக்குக்கூட
பயப்படும் முதிர்ந்த சருகாய்ப்போனது…

வானவேடிக்கை போல் வாழ்ந்த காலங்கள் – இன்று
வானத்தை வேடிக்கை பார்க்கும் காலங்களாய் மாறிவிட்டன..

காலத்தின் கட்டாய மாற்றத்தினால்
கவிதை எழுதுகிறேன் – கேளுங்கள்….

நேற்றுவரை தோழியாய் இருந்த ஒருத்தியயை
காதலியாக்கிகொள்ள கடிதம் எழுதினேன்…
முதல் வரியிலேயே பேனாமுனை பிதற்றியது
இரத்த கண்ணீர் வடிப்பதுபோல்
ஒருமுனையில் ஒழுகியது – புத்திக்கு எட்டவில்லை..

முதல் காகிதத்தை கிழித்தெரிந்தேன் – ஆமாம்
பேனா அவள் கொடுத்தது..

காகிதங்கள் கரையத்தொடங்கின – ஆனால்
காதல் கடிதம் மட்டும் ஒரு வரி கூட எழுதப்படவில்லை..

முதல் நாளே சொல்லியிருந்தால்
மூன்று நாட்க்கள் கழிந்திருக்கும் – பாவம்
இன்றுதான் முற்றுப்பெற்றது கடிதத்தின் முக்கால் பகுதி..

தேடித்தேடிக் கிடைத்த வார்த்தைகள்
தீர்மானமாய் தொகுக்கப்பட்ட வரிகள்
இருபத்தியோரு வரிகளுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம்
இத்தனைக்கும் இடையில் – காதலையும் சொல்ல வேண்டும்
கிழிந்து போக தயாராகிக் கொண்டிருக்கும் காகிதம்
சேர்க்க முடியா நிலையில் சிதரப்போகும் எழுத்துக்கள்
கண்ணீர்த் துளிகளை சேகரித்து வைக்கும் கண்கள்
இவையெல்லாம் சேர்ந்து தயாரித்து முடித்தன
அவளுக்கான முதல் – காதல் கடிதம்…

இமயத்தை இமைகளால் மூடிய ஒரு உணர்வு
சீனப்பெருஞ்சுவரை சிறுவிரலில் அளந்த்துவிட்ட கர்வம்
புத்தக இடுக்கில் காதல் கடிதம் சிக்கியிருந்தது
அவள் கண்களின் அசைவில் – என் காதல் சிக்கியிருந்தது

வழக்கமாய் தேவதைகள் வெள்ளை நிறத்தில் தோன்றுவார்கள்
அன்று மட்டும் (என்) தேவதை மஞ்சள் நிற சுடிதாரில்..
கண் இமைக்கும் நொடிக்குள் கண் முன்னே நின்றாள்
தேரடி வீதி பஸ்டாப்பில் தொடங்கியது – என்
காதலை அவளிடம் சொல்லும் முதல் முயற்சி…


1 - கருத்துரை:

cheena (சீனா) said...

அன்பின் ருத்ரவீணை

அருமை அருமை காதல் கவிதை அருமை - முதல் கடிதம் கொஉட்த்து முதல் முதலாக காதலைத் தெரிவிக்கும் முயற்சி வாழ்க

நல்வாழ்த்துகள் ருத்ர வீணை