| |

ஆகவே…..காதல் செய்வீர்




பட்டாம்பூசிகளின் அருங்காட்சியகத்தில்
நுழைந்தது போல் ஒரு உணர்வு…
தேவதைகள் சாம்ராஜ்ஜியதின்
அரசன் ஆனது போல் ஒரு பெருமை…
உலகதின் அனைத்து அணுக்களும்
ஸ்தம்பித்து நின்றது போன்ற பிரமை…
எதை வேண்டுமானாலும் கற்பனை செய்ய
கடவுளின் உத்தரவு கிடைக்கும் நாள்…..
பார்வையில் இனிமையும்
பேச்சில் மென்மையும்
நமக்கு தெரியமலே வந்துவிடும்….
ஆம்… காதலியை சந்திக்கும்
ஒவ்வொரு ஆண் மனதின் மாற்றங்கள்..

தனிமைகள் நிறைந்த மாநிலத்திற்க்கு
முதல் மந்திரியாக ஆவீர்கள்
ஒத்திகையின் பயன்கள்
விளங்கத் தொடங்கும்
வார்த்தைகள் தேடும் படலம்
மிகக்கவனமாய் ஆரம்பிக்கும்
முகக்கண்ணாடி முன் நிற்பதே
முழுநேர வேலையாக மாறும்
வாய்விட்டு சிரித்துவந்த காலம்போய்
புன்னகையின் அளவுகள் சரிபார்க்கப்படும்
உங்களுக்காகவே படைக்கப்பட்ட
ஒரு உலகத்தை – நீங்கள் உணரும் நேரம்..
நேற்று வரை பார்த்து வந்த நிலவும்
காதலியின் முகமாய் பதவி உயர்வு அடையும்...
குயில் கூவும் பாட்டுக்கும்
காதலியின் பேச்சுக்கும்
வேற்றுமை இல்லாமல் போகும்…
அனுமதிக்கான காத்திருப்புகள்
இனிதே ஆரம்பிக்கும்..
காதலியிடம் காதலை பெற்றுவிட்ட
காதலனின் மனமாற்றம்…..


0 - கருத்துரை: