| |

காதல் கும்மாங்குத்து





"டேய் மாப்ள.. நான் இன்னிக்கு அனிதாகிட்ட லவ் சொல்லிட்டேன்டா"
"என்ன மச்சான் சொல்ற.. ஓகே ஆயிடிச்சா"
"இல்ல மாப்ள.. வழக்கம்போல ஊத்திகிச்சு.. இன்னிக்கு கொஞ்சம் ஓவரா போயிட்டா"
"என்ன மச்சி.. எதனா போலீஸு கீலீசுனு போயிட்டளா?"
"இல்ல மாப்ள.. இது வேற.. மனசுக்கு கஷ்டமா இருக்கு"
"இன்னான்னுதான் சொல்லேண்டா"
"வேணாம் மாப்ள.. பேஜாராய்டுவ.. விட்டுடு."
"சும்மா சீன் போடாத மச்சி.. என் கிட்ட சொல்றதுக்கு என்ன.. சொல்லு"
"இல்ல மச்சி.. லவ் சொன்னோன்ன அவ செருப்ப கழட்டி அடிச்சிட்டா டா."
"அடப்பாவி.. என்னடா சொல்ற"
"ஆமாம் மச்சி.. பேஜாராய்டிச்சி.. அதான் ஒரு கவிதை சொல்லிட்டு வந்துட்டேன்"
"கொய்யால.. அடிவாங்கியும் நீ திருந்தலியா?.. என்ன கவிதை அது சொல்லு.. நானும் கொஞ்சம் கேக்கறேன்"
"சொல்றேன் மச்சி.. சொல்றேன்.."

நீ என்னை
செருப்பால் அடித்ததுகூட வலிக்கவில்லை
ஆனால் - அப்போது அழுக்கான உனது
கால்களை துடைத்துவிட
என்னைப்போல் ஒருவன் வரமாட்டன் - என்று
நினைக்கும்போதுதான் வலிக்கிறது..

"வாழ்க உன் காதல் மச்சி.. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.. நான் கிளம்பறேன்.."

5 - கருத்துரை:

Paleo God said...

சுறா படமே தேவலாம் போல இருக்கே!

:)

யூர்கன் க்ருகியர் said...

super nanbaa !
கவிதை சொன்னப்புறம் அடி பலமா விழுந்திருக்குமே ?

ஜில்தண்ணி said...

முடியல !!!
இந்த கதைய பாருங்க

http://jillthanni.blogspot.com/2010/04/blog-post_30.html

மதுரை சரவணன் said...

VEENAI UNMAIYILE RUTHRAM.

Prasanna said...

சாரி அவர் கஷ்டத்த சொல்லிட்டு இருக்கும்போது.. தலைப்பிலேர்ந்து கடைசி வரை சிரிச்சிட்டேதான் இருந்தேன் :))