| |

வாழ்கை ரீஸ்டார்ட்




"டேய் சங்கர். சூர்யாவ ஏண்டா சுட்ட?"

"இல்லடா. தெரியாம கை பட்டுடிச்சிடா. வேணும்னு பண்ணல"

"என்னடா சொல்ற. இப்போ என்ன பண்றது. எல்லாம் பிளான் பண்ணிட்டுதான இத ஆரம்பிச்சோம். இப்போ வந்து இப்படி பண்ணிட்டியே"

"ஐயோ. தப்பு பண்ணிட்டேன்டா. நானே கவலைல இருக்கேன். இப்போவந்து இப்படி பேசறியே."

"இல்லடா. அதுக்காக இல்ல. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது."
"என்ன பண்ணலாம்னு சொல்லுடா. அம்மா கிட்ட வேணும்னா சொல்லிடலாமா?"

"ஆண்டிகிட்டயா????"
...........................

"ரெண்டு பேரும் சேந்து என்ன காரியம் பண்ணிருக்கீங்க. இப்படி பண்ணிட்டு என் முன்னாடி வந்து நிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்"

"ஆண்டி. நான் பண்ணல. சங்கர்தான். நான் வந்து வேணாம்னு சொல்றதுக்குள்ள அவன் சூர்யாவ சுட்டுட்டான்"

"அம்மா, நான் வேணும்னு பண்ணலாமா. தெரியாம கை பட்டுடிச்சி."

"இருங்க இருங்க ராத்திரி அப்பா வரட்டும் சொல்றேன். அந்த புள்ள சூர்யா இப்போ தான் காலேஜ் முடிச்சி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருந்தான். அவன் ஒரு வேலைக்கு போய், வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து வளத்து பேரன் பேத்தி பாத்துனு எவ்வளோ ஆசை வெச்சிருந்தான். இப்படி அநியாயமா கொண்ணுடீங்களே. உன் தங்கச்சிக்கு இந்த விஷயம் தெரியுமா?"

"என்னமா, அண்ணா என்ன பண்ணான்?"

"இல்லடி. சூர்யா அண்ணா செத்துப் போய்ட்டாரு. உங்க அண்ணன் சங்கர் அவன சுட்டுட்டான்"

"அண்ணா. ஏன்னா இப்படி பண்ண. அந்த அண்ணா எவ்வளோ நல்லவரு தெரியுமா. எனக்கு டிரஸ் சாக்லேட் எல்லாம் வங்கி தருவாரு. அப்பப்போ ஷாப்பிங் எல்லாம் கூட போயிருக்கேன். அந்த அண்ணா சூப்பரா ஜோக்கெல்லாம் சொல்லுவாரு. ஏன்னா இப்படி பண்ணிட்ட. அப்பா வந்தா திட்ட போறாரு."

"ஐயோ சும்மாரு. அப்பா வந்துட்டாரு."
..........................................

"என்னங்க, உங்க புள்ள சங்கர் செஞ்ச காரியத்த பாத்தீங்களா. அநியாயமா சூர்யாவ கொன்னுட்டான்"
"எந்த சூர்யா டி.. எழவ கொஞ்சம் புரியறாமதிரி சொல்லித்தொல"
"அதாங்க, நம்ம சூர்யாதாங்க"
"அதுக்கென்ன இப்போ.?"
"என்னங்க இப்படி கேக்கறீங்க. இனிமேல் ஒன்னும் பன்னமுடியாதா?"
"இரு நாளைக்கு ஒருத்தன கூட்டிட்டு வரேன். அவன் வந்து சரிபண்ணுவான்"
.........

"சார். கேம் ரீஸ்டார்ட் பண்ணனும் சார். வேற வழி இல்ல."
"அய்யயோ. அப்போ அந்த புள்ள சூர்யாவ பொழைக்கவெக்க முடியாதா?"
"மேடம். இது கம்ப்யூட்டர் கேம். ரீஸ்டார்ட் பண்ணினா, எல்லாம் மாறிடும். திரும்பவும் நீங்க முதல்லேர்ந்து ஸ்டார்ட் பண்ணனும்."
"வாட் ??????????.. அப்போ என்னோட சூர்யா?????????"
........

"அம்மா இப்பவும் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்காங்க. எதுவும் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சொல்லமுடியும்."
"டாக்டர் அம்மாவை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர். ப்ளீஸ்...."

......................................

4 - கருத்துரை:

Ahamed irshad said...

Nice Story...

அ.முத்து பிரகாஷ் said...

நன்னாருக்கு ருத்ரா ...

அண்ணாமலை..!! said...

மறுபடியும் முதல்ல இருந்தா??
:)
நல்ல கற்பனை!

கமலேஷ் said...

ஏங்க இப்படி அநியாயம் பன்றீங்க....நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள்..