| |

திருடிய காதல்



"வேணாம் முத்து. அப்பாகிட்ட மாட்டிகிட்டா அவ்வளோதான். என்ன பண்ணுவார்னு எனக்கே தெரியாது"

"அதான் தெரியாதுல்ல, அப்பறம் ஏன் அதப்பத்தி கவலைப்படற. நான் பாத்துக்கறேன். நீ வா."

"ஐயோ. கைய விடுடா. யாராவது பாக்க போறாங்க. எல்லாம் பஸ் ஏறிட்டு வெச்சுக்கலாம்."

"கையதானடி புடிச்சேன். அதுக்கேவா?. சரி, என் பின்னாடியே வா."

"இல்ல முத்து. எனக்கென்னவோ நாம தப்பு பண்றோம்னு தோணுது. இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல. நாம இப்படியே திரும்பி போய்டலாம். வீட்ல யாரவது கேட்டா எதாவது சொல்லி சமாளிச்சிடலாம்."


"சும்மா பயப்படாம வாடி. இதுதான் நம்ம தலையெழுத்துனு ஆயிடிச்சி. அப்புறம் கவலைப்பட்டா நடக்குமா. இதெல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்."

"டேய். இப்போவே என்ன குழந்தையை பத்தி பேசற. எனகென்னவோ பயமா இருக்குடா. என்னை ஏமாத்த மாட்டயில்ல."

"அடியேய். சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னா, அத அப்படியே எடுத்துக்கிட்டா நான் என்னடி பண்றது. சும்மா புலம்பாம வா."

"பாத்தியா, இப்போவே புலம்பறேன் அது இதுனு சொல்ற. நீ கண்டிப்பா என்ன ஏமாத்தத்தான்போற"

"வேனாண்டி, நானே எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பீதில வந்துகிட்டு இருக்கேன். சும்மா தொனதொனக்காத."

"இல்லடா. இப்போவே உனக்கு எம்மேல வெறுப்பு வந்துடிச்சி. இனிமே எப்படி நீ என்ன வெச்சி காப்பாத்த போற.எனக்கு நம்பிக்கையில்ல."

"சும்மா சும்மா இதையே சொல்லாத. நான் உனக்கு வேணும்னா என் பின்னாடி வா."

"என்னடா பயமுறுத்திரியா. நான் வரலனு சொன்னா என்னடா பண்ணுவ."

"நான் என்னடி பண்ணமுடியும். போலீஸ் ஸ்டேஷன்ல போய் காதல் திருடு போச்சுன்னு கம்ளைன்ட்டா பண்ண முடியும். போறதுனா போ."

"ரொம்ப பேசறடா நீ. உன் கூட என்னால வாழ முடியாது. நான் கிளம்பறேன். கூட்டிட்டு வந்த மாதிரி என்ன வீட்ல கொண்டு போய் விடு."

"எனக்கு திருட மட்டும்தாண்டி தெரியும். திருப்பி கொடுக்க தெரியாது. நான் உன்ன கொண்டுபோய் விட்டா இந்த திருட்டுக்கு மதிப்பில்லாம போய்டும். உன்ன பொறுத்த வரைக்கும் நான் உனக்கு லாயகில்லாதவன். ஆனா நீ எனக்கு எப்பவும் திருடிய காதலிதான்".


கேள்விகள் கேட்டதால்
காணாமல் போனது - என்றும்
கேட்காமல் நான்
திருடிய காதல்

2 - கருத்துரை:

ஜில்தண்ணி said...

பின்னிபுட்டீங்க நண்பா...
அந்த கவிதையில டச்சு பன்னிப்புட்டீங்க போங்க
:)))

Ahamed irshad said...

நல்லாயிருக்குங்க சிறுகதை..