| | 0 - கருத்துரை

ஆதாம் கவிதைகள் - புலனடக்கம் !!

| | 0 - கருத்துரை

ருத்ர வீணை - கம் பேக் !!!

காதல் தேசம் படத்தில் வரும் என்னை காணவில்லையே நேற்றோடு” என்ற பாடலின் ராகத்தில் இந்த கவிதையை படியுங்கள்ரசிக்கலாம்.

பல்லவி

கண்ணில் காதல் கேட்கிறேன் இப்போது
முள்ளின் முனையில் நிற்க்கிறேன் நெஞ்சோடு
ஒரு வார்த்தை கேட்க்காமல் உயிர் வாடும் - கண்ணே ....

வலியோடு வாழ்கையை கொடுக்காதே
கண்ணனை இமைகள் என்றுமே வெறுக்காதே
உன்னை கண்டபோது நான் தொலைந்தேனே - கண்ணே ...

நெஞ்சுக்குள் பூகம்பம் .. உன்னாலே...
வா வா என் கண் முன்னே
பூவில் நீ தேன் தானே .. ( கண்ணில் காதல் )

சரணம் - 1

காற்றாக நான் வாழ்வேன் நீ வந்த்து நின்றால்
உன்னோடு பிரியா நிலையாவேன்

தீயாக நான் வாழ்வேன் நீ என்னில் என்றால்
சுடராக மாறி ஒளியாவேன்

என்னுள்ளில் உனைத்தானே எப்போதும் பார்த்தேன்
நான் மாறி வெகுனாளாய் நீயாக ஆனேன்
என்னோடு காதல் சொல்லிவிடு....... ( கண்ணில் காதல் )

சரணம் - 2

முத்தங்கள் எப்போதும் சத்தம் வராமல்
நெஞ்சோடு வைக்கும் ஒன்றாகும்

அலைவந்து தீண்டாமல் கரைகள் இராது
தீண்டல்கள் பாவம் ஆகாது

சாகாமல் எனைக்கொல்லும் வானத்துப் பூவே
நீயின்றி வாழ்வாகும் ஒரு காதல் தீவே
என்னோடு ஒன்றாய் கலந்துவிடு....... ( கண்ணில் காதல் )

| | 4 - கருத்துரை

பாட்டு இங்கே - மெட்டு எங்கே (1)

இது உங்களை இசையமைப்பாளராக்கும் ஒரு சிறு முயர்சிதான். பாட்டுக்கு மெட்டு போடுவது கொஞ்சம் கடினமான காரியம்.  இதோ பாட்டு, எங்கே உங்கள் மெட்டு ???!!!!

பல்லவி 


ஊத்திக்கொடு மச்சான்
ஊத்திக்கொடு மச்சான்
ஊருகாய கொஞ்சம் சேத்துக்கடிடா


சேத்து வெச்சேன் கவலை
தீத்துப்புட்டான் சகலை - இவன்
குவாட்டருக்கு பொறந்த தெய்வமகன்டா


சேர்ந்து குடிச்சி போவோமே நாங்க
ஊருக்குள்ள தேரு போலத்தான்
மயங்கி விழுந்து மல்லாக்க படுப்போம்
சூரியன் விழிப்பான் எங்க மூஞ்சிலத்தான்


சரணம் - 1


காலையில் தினமும் கால் பாட்டில் அடிச்சா
நாளெள்லாம் இருக்கும் ரொம்ப லைட்டா
மாலை மயங்கும் மப்பு ஏற குடிச்சா
ராவெல்லாம் இருக்கும் செம்ம டைட்டா


கை நெறையா காசு இருந்தா
கவர்ச்சி பாரு இருக்குது
கொஞ்சம் கஷ்டமாயி போச்சுதுன்னா
கவர்மெண்ட் கடை இருக்குது


கட்டிங் அடிச்சி கொத்து உட்டா
வருது பாரு வாந்தி
பிட்டிங் இல்லா வாழ்கை மாறும்
கரைய சேரு நீந்தி
(ஊத்திக்கொடு மச்சான்)


சரணம் - 2


ஓசியில ஊத்திகிட்டா ஒன்னாம் பெக்குல ஜோரு
கடைசியில பில்லு வந்தா பிச்சிகிட்டு ஓடு
ராசியில்லா குடிமகனாய் நீ இருந்த பாரு
எம்சி தந்த வாழ்கையில அதயே தினம் நாடு


ஃபுல்லு கூட பீரு சேர்ந்தா 
அப்போதைக்கு அப்பீட்டு
கள்ளு குடிச்சி போதை வந்தா 
எப்பவுமே ரிப்பீட்டு


முழு பாட்டில் வாங்கி வெச்சு
மூடி சிக்குனா போச்சு
வாழ்கைய நீ வாழ்ந்து காட்டு
சும்மா என்ன பேச்சு
(ஊத்திக்கொடு மச்சான்)

| | 0 - கருத்துரை

ஆறாம் அறிவு



தலைநிமிர்ந்து நிற்க்கும்
மெழுகுவர்த்திச் சுடரின்
அடர்ந்த ஜுவாலையின்
நடுவில் கொண்டுபோய்
கைவிரலை வைத்ததும்தான்
உரைத்தது எனக்கு
மனிதன் மட்டும்
சொல்லிக் கொண்டிருக்கும்
நாய்களாள் இதுவரை
ஏறுக்கொள்ளப் படாத
அறாம் அறிவு
உயர்தினைக்கு சாபம் !!

| | 5 - கருத்துரை

உதவி

”நேத்து எப்போடா வீட்டுக்கு வந்த ?” - அம்மாவின் கேள்வி சந்தேக தொணியில் இருந்தது.
“அது வந்து அம்மா”  என்பதர்க்குள்ளாக அவளின் இரண்டாவது கேள்வி என்னை புரட்டிப்போட்டது.
“குடிச்சிட்டு வந்தியா?”
“அம்மா. என்ன அம்மா இப்படி கேக்கற. நான் ஏம்மா குடிக்கப்போறன்”
“அப்போ அந்த பாட்டில் எப்படி உன்னோட கார் டிக்கில வந்துச்சு?” என்று அவள் கேட்ட போதுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.
“அம்மா. அந்த விஷயம் பத்தி பேசலாம்னு தான் காலைல வந்ததும் உன் ரூமுக்கு வந்தேன். நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அதான் அப்பறம் சொல்லலாம்னு இருந்தேன்.”
“என்னடா விஷயம்.  எதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. நேத்து ராத்திரி நான் லாஸ்ட் கஸ்டமர வீட்ல விட்டுட்டு வரும் போது ஒரு சின்ன ஆக்ஸிடண்ட். ஒரு பையன் கார் முன்னாடி வந்து விழுந்துட்டான். அவன கொண்டுபோய் ஆஸ்பதிரில சேத்துட்டு கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வந்தேன். அதான் லேட் ஆயிடிச்சி.”
“அப்போ அந்த பையனுக்கு என்ன ஆச்சி?”
“ஒன்னும் இல்லமா, சின்ன காயம்தான். ஆனா ஆஸ்பத்திரில சொன்ன விஷயத்த கேட்டுட்டுத்தான் ரொம்ப சங்கடமா போச்சு.”
“என்னடா சொன்னாங்க? அந்த பையனுக்கு என்னவாம் ?”
“அதுவந்தும்மா, அந்த பையனுக்கு லிவர் கெட்டுப்போச்சாம்”
“என்னாடா சொல்ற, எப்படி?”
“அம்மா, அந்த பையன் ரொம்ப குடிப்பான் போலருக்கு, அதான் இப்படினு டாக்டர் சொன்னாரு. யாருகிட்டயும் சொல்லாம இருந்திருக்கான் போலருக்கு.”
“அய்யோ பாவம். அவங்க வீட்டுக்கு போன் பண்ணினியா? இப்போ அவன் கூட யாரு இருக்கா?”
“அவங்க அப்பாவுக்கு போன் பண்ணினேன், அவரு அங்க வந்த்ததும் தான் நான் கிளம்பி வந்த்தேன்”
“சரி. யாரு பெத்த புள்ளயோ, நால்லா இருக்கட்டும். நீ இன்னைக்கு எப்பொவாவது அந்த பக்கம் போனைனா அவன ஒரு வாட்டி போய் பாரு.”
“சரிம்மா. நான் கொஞ்ச நேரம் போய் தூங்கரேன்.” என்று சொல்வதர்க்குள்ளாக யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
“இரும்மா, நான் பாக்கறேன்” என்று கதவை திறந்த போது அங்கு நின்றுகொண்டிருந்தது அந்த பையனின் அப்பா.
“என்ன சார். ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல தம்பி. அவன் இப்போ கண்ணு முழிசிட்டான். நீங்க மட்டும் இல்லனா அவன நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது. தம்பி நீங்க என்ன வேலை செய்யறீங்க”
“நான் கால் டாக்ஸி டிரைவர் சார். நேத்து ராத்திரி நான் லாஸ்ட் கஸ்டமர டிராப் பண்ணிட்டு வரும் போது தான் உங்க பையனை இடிச்சிட்டேன். நான் இடிச்சதுல காயம் பட்டுதான் ரத்தம் வருதுனு ரொம்ப பயந்த்துட்டேன் சார். ஆனா, டாக்டர் கிட்ட விசாரிச்சப்பரம்தான் தெரிஞ்சது உங்க பையனுக்கு இப்படி ஒரு வியாதினு. டாக்டர் என்ன சார் சொன்னாரு”
“இப்போவே கண்டுபிடிச்சது ரொம்ப நல்லாதாபோச்சுனு சொன்னாரு தம்பி. மறுபடியும் சொல்றேன், நீங்க மட்டும் இல்லனா அவன நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது. இதுக்கு நான் ஏதாவது கைமாறு செய்யனும் தம்பி.”
“அதெல்லாம் வேணாம் சார். உங்க பையனை நல்லபடியா கவனிச்சிக்குங்க”
“இல்ல தம்பி. நீங்க ஓட்டுறது உங்க சொந்த வண்டியா?”
“இல்ல சார். பேங்க் லோன்ல தான் வாங்கிருக்கேன்.”
“தம்பி. இனிமேல் இது உங்க சொந்த வண்டி. அந்த பேங்க் டாக்குமெண்ட்ஸ் மட்டும் குடுங்க, மத்தத நான் பாத்துக்குறேன்.”
“அய்யாயோ. நான் இதெல்லாம் எதிர்ப்பார்த்து செய்யால சார்.”
“அது தான் தம்பி இந்தக்காலத்துல இல்ல. நான் இந்த உதவிய உங்களுக்கு செய்தே ஆகனும். அதுதான் நீங்க செஞ்ச உதவிக்கு நான் செய்யற நன்றிக்கடன்.” என்ற சொல்லைக்கேட்டு நான் செய்வதறியாது நின்றேன்.

| | 5 - கருத்துரை

ஆதாம் கவிதைகள் - 3



ஆதாம் கவிதைகள் - 1
ஆதாம் கவிதைகள் - 2

நான் மேல் நோக்கி போவதால்
வானம் கீழிறங்கும் தோன்றல்
தோன்றல்களின் இன்பத்தினூடே
சுகங்கள் அனுபவிக்கக் கூடும்
சுகங்கள் அனுபவிக்கும் போதுதான்
நேரத்தின் வேகம் கூடும்
வேகம் கூடியதால் நடுவில்
மாட்டித்தவிக்கும்
அந்த
ஆசையெனும் முள்
முள்ளின் அசைவில்
நேரம் விரைவதால்
அதை
நிறுத்த முற்ப்பட்டும் மூளை
மனப்போராட்டத்தில் எப்போதும்
மூளை தோற்றுப்போகும்
அதன்பின் வரும் வெற்றியில்
தோற்றதன் காரணம் அறியவரும்
இத்தனையும் நடந்தேறும்
அரை நொடிப் போழுதில்
அடுத்தடுத்த அரை நொடிப்போழுதுகள்
தொடங்கும்
அதே தோன்றலின் இன்பத்துடன் !!

| | 3 - கருத்துரை

வ - குவாட்டர் கட்டிங் !!



தமிழ் படம் என்கிற ஒரு தரமான படம் (அப்படியா?) தந்த அதே டீம் இப்போ
“வ - குவாட்டர் கட்டிங் “ னு ஒரு படம் பண்ணிருக்காங்க. அந்த படத்தோட பாடல்கள் பற்றி  கொஞ்சம் சொல்லலாம்னு - இந்த பதிவ போட்டேனுங்க.
மொத்தம் 5 பாடல்கள்.

1) ”உன்னை கண் தேடுதே” - னு ஆரம்பிக்ற முதல் பாடல், மொத்தமாய் தத்துவ பாடல்.  கிட்ட தட்ட பழைய பாடல் சாயலில் கிறங்கடிக்கும் வகையில் பாடல் பதிவு. அதிலிருந்து சம்பிள் ஒரு தத்துவம், “ கீழ தட்டி மேல திருகுனா அதுதான் சொர்கம் போகும் வழி”. (எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க)

2) “தேடியே தேடியே” - னு தொடங்கும் பாடல், அயிரத்தில் ஒருவன் புகழ் ஆண்ட்ரியா பாடியிருக்கிரார். அருமையான குரல். பெண்ணின் ஏமாற்றம் குறித்த வரிகள். கேட்க இனிமை.

3) ”ஷேக் ஷேக்” - னு ஒரு பாட்டு. நீங்க நினைக்கிற ஷேக் இல்லீங்க ( நினைத்தவர்களுக்கு மட்டும்). சவுதி அரேபியா ஷேக். ஒரு ஜாலி பாட்டு. படம் பாத்தா தெரியும் இந்த பாட்ட எதுக்கு வெச்சானுங்கன்னு.

4) ”சார்ர்ப்பு சார்ர்ப்பு” - னு இன்னும் ஒரு தத்துவ பாட்டு. வாழ்வை மேம்படுதும் தத்துவங்கள். சாம்பிள் ஒன்னு - “ பேலன்ஸ் இல்லாம காலு பண்ணுவேன் , காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்”. தமிழ் வாழ்க.

5) “உன்னை கண் தேடுதே - ரீமிக்ஸ்” - இதுல பாட்டு (அது எங்க கேக்குது) அதேதான். ஆனா, டொம் டொம்ணு அடிச்சி காத கிழிக்கிறானுங்க. வேற ஒன்னும் பெருசா இல்ல.

நீங்க கேக்க விரும்பினால் - இங்கே சொடுக்கவும்

| | 4 - கருத்துரை

கிருஷ்ண ஜெயந்தி - மொக்க கவிதை

கிருஷ்ணன் பொறந்தது
கிருஷ்ண ஜெயந்தி
காந்தி பொறந்தா
காந்தி ஜெயந்தி
அப்போ
ஜெயந்தி பொறந்தா ? !!!

சீடை முறுக்கு
அவில் வெண்ணை
இதெல்லாம்
பொறந்த குழந்தை (கிருஷ்ணன்)
எப்படிபா தின்னும் ?!!

(சாமி கண்ண குத்தாம இருந்தா சரி :-)

| | 6 - கருத்துரை

தலைப்புச் செய்தி

“இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது” என்பது
செய்தித்தாளில் தலைப்புச்செய்தியானது
அதில் அடுத்த வரி
“ஏழைகளுக்கு இலவச கஞ்சி” என்பது
சாலையோர பெண்ணுக்கு தலைப்புச்செய்தியானது
அதற்க்கு அடுத்த வரி
“இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” என்பது
அவளின் குழந்தைக்கு தலைப்புச்செய்தியானது
”டாஸ்மாக்கில் தள்ளுபடி” என்பது
அவளின் அவனுக்கு  தலைப்புச்செய்தியானது
”தலைவர்கள் வாழ்த்து” எனும்
தலைப்புச்செய்தியே
இவர்களின் இன்றைய வாழ்க்கையானது !!

| | 1 - கருத்துரை

அதிஷ்டம்


சீட்டுக் கிளியின் சாமர்த்தியர்த்தில்
சில அதிஷ்டம் வரும்

நல்ல வேலை கிடைக்கவில்லை என்று
உட்கார்ந்து புலம்புவோர்க்கும்
காதலி ஓடிவிட்டாள் என்று
சோக கவிதை வாசிப்பவர்க்கும்
சாப்பிட வழியில்லை என்று
திருடி பிழைப்பவர்க்கும்
தன்னம்பிக்கையை மறந்துவிட்டு
தோற்றதும் சாக நினைப்பவர்க்கும்
நான் தலைவன் என்று
கட்டளைகள் விதிப்பவர்க்கும்

இவர்கள் நிமிர்ந்து பார்க்காமல்
இருக்கும் வரை நல்லது
இவர்களை பார்த்த கிளி
தனக்கு வந்த அதிஷ்டதில்
என்றோ பறந்திருக்கும்

| | 3 - கருத்துரை

மனம் ஒரு குரங்கு

அமிலக் குடுவை மனம்
புகைக்க மறந்த வத்தி
திமிர் மறந்த நாட்களில்
தினமும் ஒரு பாடம்
சகதியில் நீராய்
கெட்டுவிட்ட புத்தி
சமத்துவம் பேசும் போது
விழித்துக்கொள்ளும் அறிவு
சந்தர்ப்பம் பார்த்து
இல்லை என்று போகிறது
முடங்கிப் போய்
மூலையில் பதுங்கும் பயம்
கண்டிப்பாய் காற்று
நம்மை நோக்கி வீசுவதில்லை
கண் பார்வையும்
பல சமயம் அப்படித்தான்
கடல் வாங்கும்
மேல் மூச்சும் கீழ் மூச்சும்
அலையாய் எனக்கு தெரியும்
பிம்பங்கள் பொய்
என்றது கண்ணாடி
மனசாட்சி உண்மையா
என்றது மனம்
மனம் ஒரு குரங்கு
என்றேன் நான் !!

| | 1 - கருத்துரை

அதாம் கவிதைகள் - 2





இரவின் மௌன இரைச்சல்
மெதுவாய் தூக்கம் கலைக்கும்
விழியின் வழி வெப்பம்
புவியின் நிலை மாற்றம்
விளைவில் ஒரு நிகழ்வு
முதலில் வரும் உணர்வு
தினமும் இது தொடர்ந்தால்
புல்வெளியில் பனி படர்ந்தால்
வினவும் மறுகணமே
சரியென்றது மனமே
தொடரும் முடிவுரைக்கும்
சில மயக்கங்களின் விருப்பம்

| | 3 - கருத்துரை

ஆதாம் கவிதைகள் - 1



கண்கள் தொலைந்து போக
மை திருடிய இரவு
நாய்களின் நகர்வலத்தை
நிசப்தம் தேடும் நேரம்
கூடுகள் தாவித்தாவி
ஓய்ந்து போன பேய்கள்
எதிர் நோக்கா
திமிர் எண்ணம்
அதிர்வலையின் புதிர்
புணர்வது என் புத்தி
முதல் மயக்கம் முடிந்ததுவே
பலமயக்கம் தொடங்கிடவே !!

| | 4 - கருத்துரை

வாழ்கை ரீஸ்டார்ட்




"டேய் சங்கர். சூர்யாவ ஏண்டா சுட்ட?"

"இல்லடா. தெரியாம கை பட்டுடிச்சிடா. வேணும்னு பண்ணல"

"என்னடா சொல்ற. இப்போ என்ன பண்றது. எல்லாம் பிளான் பண்ணிட்டுதான இத ஆரம்பிச்சோம். இப்போ வந்து இப்படி பண்ணிட்டியே"

"ஐயோ. தப்பு பண்ணிட்டேன்டா. நானே கவலைல இருக்கேன். இப்போவந்து இப்படி பேசறியே."

"இல்லடா. அதுக்காக இல்ல. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது."
"என்ன பண்ணலாம்னு சொல்லுடா. அம்மா கிட்ட வேணும்னா சொல்லிடலாமா?"

"ஆண்டிகிட்டயா????"
...........................

"ரெண்டு பேரும் சேந்து என்ன காரியம் பண்ணிருக்கீங்க. இப்படி பண்ணிட்டு என் முன்னாடி வந்து நிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்"

"ஆண்டி. நான் பண்ணல. சங்கர்தான். நான் வந்து வேணாம்னு சொல்றதுக்குள்ள அவன் சூர்யாவ சுட்டுட்டான்"

"அம்மா, நான் வேணும்னு பண்ணலாமா. தெரியாம கை பட்டுடிச்சி."

"இருங்க இருங்க ராத்திரி அப்பா வரட்டும் சொல்றேன். அந்த புள்ள சூர்யா இப்போ தான் காலேஜ் முடிச்சி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருந்தான். அவன் ஒரு வேலைக்கு போய், வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து வளத்து பேரன் பேத்தி பாத்துனு எவ்வளோ ஆசை வெச்சிருந்தான். இப்படி அநியாயமா கொண்ணுடீங்களே. உன் தங்கச்சிக்கு இந்த விஷயம் தெரியுமா?"

"என்னமா, அண்ணா என்ன பண்ணான்?"

"இல்லடி. சூர்யா அண்ணா செத்துப் போய்ட்டாரு. உங்க அண்ணன் சங்கர் அவன சுட்டுட்டான்"

"அண்ணா. ஏன்னா இப்படி பண்ண. அந்த அண்ணா எவ்வளோ நல்லவரு தெரியுமா. எனக்கு டிரஸ் சாக்லேட் எல்லாம் வங்கி தருவாரு. அப்பப்போ ஷாப்பிங் எல்லாம் கூட போயிருக்கேன். அந்த அண்ணா சூப்பரா ஜோக்கெல்லாம் சொல்லுவாரு. ஏன்னா இப்படி பண்ணிட்ட. அப்பா வந்தா திட்ட போறாரு."

"ஐயோ சும்மாரு. அப்பா வந்துட்டாரு."
..........................................

"என்னங்க, உங்க புள்ள சங்கர் செஞ்ச காரியத்த பாத்தீங்களா. அநியாயமா சூர்யாவ கொன்னுட்டான்"
"எந்த சூர்யா டி.. எழவ கொஞ்சம் புரியறாமதிரி சொல்லித்தொல"
"அதாங்க, நம்ம சூர்யாதாங்க"
"அதுக்கென்ன இப்போ.?"
"என்னங்க இப்படி கேக்கறீங்க. இனிமேல் ஒன்னும் பன்னமுடியாதா?"
"இரு நாளைக்கு ஒருத்தன கூட்டிட்டு வரேன். அவன் வந்து சரிபண்ணுவான்"
.........

"சார். கேம் ரீஸ்டார்ட் பண்ணனும் சார். வேற வழி இல்ல."
"அய்யயோ. அப்போ அந்த புள்ள சூர்யாவ பொழைக்கவெக்க முடியாதா?"
"மேடம். இது கம்ப்யூட்டர் கேம். ரீஸ்டார்ட் பண்ணினா, எல்லாம் மாறிடும். திரும்பவும் நீங்க முதல்லேர்ந்து ஸ்டார்ட் பண்ணனும்."
"வாட் ??????????.. அப்போ என்னோட சூர்யா?????????"
........

"அம்மா இப்பவும் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்காங்க. எதுவும் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சொல்லமுடியும்."
"டாக்டர் அம்மாவை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர். ப்ளீஸ்...."

......................................

| | 1 - கருத்துரை

அவனுக்கென்ன


"டேய் விச்சு, என்ன டல்லா இருக்க."

"இல்ல பாலாஜி, ஒரு விஷயம், ரொம்ப நேரமா யோசனை பண்றேன். ஒன்னும் புரிய மாட்டேங்குது."
"என்ன மச்சி, யோசனையெல்லாம் பலமா இருக்கு. என்ன லவ்வா ? "

"இல்ல...இல்ல.. ஆ....மாம் .. அதான்..".

"என்னடா, எந்த பொண்ணு."
"லாவண்யா மச்சி. ஒரு ரெண்டு வாட்டி திரும்பிப்பார்த்தா. அதான் அவ என்ன லவ் பண்றான்னு தோணுது, நீ என்ன மச்சி நினைக்கற?"

"டேய், பொண்ணுங்க திரும்பிப்பார்த்தா லவ் இல்ல மச்சி. அதெல்லாம் சும்மா உள்ளுலாயி"

"இல்ல மச்சி. அவ என்ன பார்த்து சிரிச்சிட்டு போனா. அதான் ட்ரை பண்ணலாம்னு.."

"அடப்போடா இவனே. பொம்பள சிரிச்சா போச்சுன்னு சொல்லி கேள்விப்பட்டதில்லையா ?"
"மச்சி. என்னடா இப்படி சொல்லிட்ட. அப்போ வேணாம்னு சொல்றியா"

"ஆமாம் மச்சி. நீ நல்லா படிக்கிற பையன். உனக்கு எதுக்கு மச்சி இதெல்லாம். வேணாம் மச்சி. விட்டுடு."

"அதுவும் சரிதான் மச்சி. அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வோதான்."

"கரெக்ட். சரி, இப்போ நீ போய் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்குல்ல, அதுக்கு ரெடி பண்ணு. நான் பின்னாடியே வந்துடறேன்."

"சரி பாலாஜி. ரூம்ல பாக்கலாம்"

*******************

"மச்சி ரஞ்சித், நான் பாலாஜி பேசறேன். அந்த லாவண்யா இன்னிக்கும் என்ன பாத்து சிரிச்சாடா . கண்டிப்பா லவ்வுனுதான் நினைக்கறேன். நீ என்ன சொல்ற?"

*******************

வனுக்கென்ன 
நான் இவளை காதலித்தால்
இவன் காதல் - என்றும்
இவன் மட்டும் அறிந்ததாயின்.


| | 2 - கருத்துரை

திருடிய காதல்



"வேணாம் முத்து. அப்பாகிட்ட மாட்டிகிட்டா அவ்வளோதான். என்ன பண்ணுவார்னு எனக்கே தெரியாது"

"அதான் தெரியாதுல்ல, அப்பறம் ஏன் அதப்பத்தி கவலைப்படற. நான் பாத்துக்கறேன். நீ வா."

"ஐயோ. கைய விடுடா. யாராவது பாக்க போறாங்க. எல்லாம் பஸ் ஏறிட்டு வெச்சுக்கலாம்."

"கையதானடி புடிச்சேன். அதுக்கேவா?. சரி, என் பின்னாடியே வா."

"இல்ல முத்து. எனக்கென்னவோ நாம தப்பு பண்றோம்னு தோணுது. இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல. நாம இப்படியே திரும்பி போய்டலாம். வீட்ல யாரவது கேட்டா எதாவது சொல்லி சமாளிச்சிடலாம்."


"சும்மா பயப்படாம வாடி. இதுதான் நம்ம தலையெழுத்துனு ஆயிடிச்சி. அப்புறம் கவலைப்பட்டா நடக்குமா. இதெல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்."

"டேய். இப்போவே என்ன குழந்தையை பத்தி பேசற. எனகென்னவோ பயமா இருக்குடா. என்னை ஏமாத்த மாட்டயில்ல."

"அடியேய். சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னா, அத அப்படியே எடுத்துக்கிட்டா நான் என்னடி பண்றது. சும்மா புலம்பாம வா."

"பாத்தியா, இப்போவே புலம்பறேன் அது இதுனு சொல்ற. நீ கண்டிப்பா என்ன ஏமாத்தத்தான்போற"

"வேனாண்டி, நானே எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பீதில வந்துகிட்டு இருக்கேன். சும்மா தொனதொனக்காத."

"இல்லடா. இப்போவே உனக்கு எம்மேல வெறுப்பு வந்துடிச்சி. இனிமே எப்படி நீ என்ன வெச்சி காப்பாத்த போற.எனக்கு நம்பிக்கையில்ல."

"சும்மா சும்மா இதையே சொல்லாத. நான் உனக்கு வேணும்னா என் பின்னாடி வா."

"என்னடா பயமுறுத்திரியா. நான் வரலனு சொன்னா என்னடா பண்ணுவ."

"நான் என்னடி பண்ணமுடியும். போலீஸ் ஸ்டேஷன்ல போய் காதல் திருடு போச்சுன்னு கம்ளைன்ட்டா பண்ண முடியும். போறதுனா போ."

"ரொம்ப பேசறடா நீ. உன் கூட என்னால வாழ முடியாது. நான் கிளம்பறேன். கூட்டிட்டு வந்த மாதிரி என்ன வீட்ல கொண்டு போய் விடு."

"எனக்கு திருட மட்டும்தாண்டி தெரியும். திருப்பி கொடுக்க தெரியாது. நான் உன்ன கொண்டுபோய் விட்டா இந்த திருட்டுக்கு மதிப்பில்லாம போய்டும். உன்ன பொறுத்த வரைக்கும் நான் உனக்கு லாயகில்லாதவன். ஆனா நீ எனக்கு எப்பவும் திருடிய காதலிதான்".


கேள்விகள் கேட்டதால்
காணாமல் போனது - என்றும்
கேட்காமல் நான்
திருடிய காதல்

| | 7 - கருத்துரை

எனக்கு பிடித்த பத்து படங்கள்



இந்த பதிவிற்க்கு காரணம் ஜில்தண்ணி என்ற பதிவு நண்பர். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் 

எனக்கு பிடித்த பத்து படங்கள்

1) 12 angry men - ஹாலிவுட் படம். ஒரே ஒரு அறையினுள் நடக்கும் கதை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவன். அவனது குற்றத்தை நிரூபிக்க ஜூரி எனப்படும் அதிகாரிகள் பன்னிரண்டு  பேர். அவர்களில் பதினோரு பேரும் குற்றவாளி என்று ஒத்துகொள்ள ,ஒருவன் மட்டும் அவன் குற்றம் செய்யாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று பேசத்தொடங்குகிறான். அங்கிருந்து, அவன் எப்படி மற்றவர்களையும் அவன் நிலைக்கு மாற்றுகிறான் என்பதுதான் கதை. இவ்வளவு நேர்த்தியான கதை சொல்லும் விதத்தை நான் இதுவரையில் கண்டது இல்லை.

2) the pursuit of Happyness  - ஹாலிவுட் படம். ஒரு வேலை இழந்த ஒருவன், தன் மனைவியும் விட்டுவிட்டு போய்விட, ஒரு குழந்தையுடன் எப்படி சாதிக்கிறான் என்பது தான் கதை. மனித வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகளும் ஒரு தனி மனிதனின் கோணத்தில் எப்படி தெரிகிறது என்பதை மிகவும் அழகாக சொல்லியிருப்பார்கள். ரசித்து பார்க்கக்கூடிய படம்.

3) நாயகன் - தமிழ் படம். இதை நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண மனிதன், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான், மறுபடியும் அவன் சாதாரண மனிதனாய் தன் சொந்த வாழ்கையை பார்க்கும்போது அது எப்படி சிதைந்து இருக்கிறது, என்கிற விஷயத்தை இவ்வளவு அழகாக சொல்ல மணிரத்தினம் என்கிற ஒருவரால் மட்டும்தான் முடியும்.

4) மகாநதி - தமிழ் படம். இதுவும் நான் விளக்கி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய படம் இல்லை. ஒரு மனிதனை சமுதாயத்தால் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்பதை சொல்ல, இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. சில இடங்களில் கமலின் நடிப்பு கொஞ்சம் அதிகமாய் தெரிந்தாலும், அவரை விட்டால் இந்த படத்தை வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்பது என் கருத்து.

5) ஹேராம் - தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்த படம். கமல் நடிப்பில் நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் சிக்கலான ஒரு கதையை, அதைவிட சிக்கலான ஒரு திரைக்கதையில் சொன்ன படம். இளையராஜா இசையால் மயக்கிய விதம விவரிக்க இயலாதது.

6) Memento - ஹாலிவுட் படம். ஒரு படத்தின் திரைக்கதை இப்படியும் இருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம். பின்னாலிருந்து தொடங்கும் கதையை முன்னும் பின்னுமாக கலந்து கடைசியில் தெளிவாக முடித்திருப்பார்கள். நான்காவது முறை பார்த்த பிறகு தான் எனக்கு ஓரளவுக்கு புரிந்தது.

7) cast away - ஹாலிவுட் படம். முதல் பாதி முழுவதும் வசனமே கிடையாது. இப்படியும் ஒரு படத்தை எடுத்து அதை வெற்றிப்படமாக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

8) வீரபாண்டிய கட்டபொம்மன் - தமிழ் படம்.ஒரு சுதந்திர போராட்ட தியாகி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்பதும், அவனது வீரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கும், இந்த படம் ஒரு உதாரணம். வசனங்களில் மிகவும் பிரபலம் பெற்ற திரைப்படம். சிவாஜியின் நடிப்பில் ஒரு மைல்கல்.

9) காதல் - தமிழ் படம். காதல் கதைகளில் வெகுவாக பலரது மனதை கவர்ந்த படம். உண்மை கதை என்று எடுக்கப்பட்ட திரைப்படம். இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவரும்படி செய்திருப்பார்கள்.

10) AVATAR - ஹாலிவுட் படம். சமீபத்தில் வெளிவந்த திரைப்படம். மனிதனின் கற்பனை சக்தி எவ்வளவு பெரியது என்பதும், அதை திரையில் கொண்டுவருவது என்பது சாத்தியம் என்பதையும் நிருபித்த திரைப்படம். அதிகமாக ஆஸ்கார் வாங்கவில்லை என்றாலும், அநேகமாக மக்கள் பேராதரவு பெற்ற திரைப்படம்.

நீங்களும் தொடரலாமே !!!!!




| | 3 - கருத்துரை

குப்புறவிழுந்த காதல்




"என்னடா சாமிநாதா.. நேத்து வனிதாவ பாக்கப்போனியே, என்ன சொன்னா ?"

"உனக்கு எப்படி தெரியும்?!!. நான் தான் யார்கிட்டயும் சொல்லலியே"..

"டேய் டேய்.. அதான் கருவாட்ட கவ்வுற மீனு மாதிரி போனியே.. விஷயத்த சொல்லுடானா"

"ஐயோ, வேணாம் விவேக்கு.. காலைலேர்ந்து அத மறந்துட்டு இருக்கேன்.. நீ மறுபடியும் மறுபடியும் வெறுப்பேத்தாத"

"உனக்கு ஐடியா கொடுக்க எனக்கு யோக்கியத இல்ல, இருந்தாலும் எதாவது ஹெல்ப் பண்ணலாம்னுதான்"

"சரிதான்டா.. நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்லற அளவுக்கு நான் ஆயிட்டேன் பாத்தியா"

"டேய்.. இந்தமாதிரி பேசிப்பேசிதான இப்படி வந்து நிக்கற.. இன்னும் உனக்கு அந்த தலைக்கனம் போகலயே"

"போதும் நிறுத்துடா. நீ உன் வேலைய போய்ப்பாரு. எனக்கு இதுல அதிஷ்டம் இல்ல. அவ்வளோதான்"

"வேணும்டா. எனக்கு நல்லா வேணும். உனக்கு போய் யோசனை சொல்ல வந்தேன் பாரு. என்னை செருப்பாலதான் அடிசிக்கணும். இது எப்படி தெரியுமா இருக்கு, நேத்து என் தோஸ்த் ஒருத்தன் கவிதை ஒன்னு சொன்னான். ஒரு நிமிஷம் அதை யோசிச்சி பாரு, அப்போ உரைக்கும் உனக்கு.
கேட்டுக்கோ."

த்தனை முறை தலை குனிந்தாலும்
திருந்தாது இந்த மீசை முளைத்த - காதல்
நேற்று கூட குப்புறவிழுந்தது
எப்போதும் போல் மண் ஒட்டாமல்

| | 5 - கருத்துரை

காதல் கும்மாங்குத்து





"டேய் மாப்ள.. நான் இன்னிக்கு அனிதாகிட்ட லவ் சொல்லிட்டேன்டா"
"என்ன மச்சான் சொல்ற.. ஓகே ஆயிடிச்சா"
"இல்ல மாப்ள.. வழக்கம்போல ஊத்திகிச்சு.. இன்னிக்கு கொஞ்சம் ஓவரா போயிட்டா"
"என்ன மச்சி.. எதனா போலீஸு கீலீசுனு போயிட்டளா?"
"இல்ல மாப்ள.. இது வேற.. மனசுக்கு கஷ்டமா இருக்கு"
"இன்னான்னுதான் சொல்லேண்டா"
"வேணாம் மாப்ள.. பேஜாராய்டுவ.. விட்டுடு."
"சும்மா சீன் போடாத மச்சி.. என் கிட்ட சொல்றதுக்கு என்ன.. சொல்லு"
"இல்ல மச்சி.. லவ் சொன்னோன்ன அவ செருப்ப கழட்டி அடிச்சிட்டா டா."
"அடப்பாவி.. என்னடா சொல்ற"
"ஆமாம் மச்சி.. பேஜாராய்டிச்சி.. அதான் ஒரு கவிதை சொல்லிட்டு வந்துட்டேன்"
"கொய்யால.. அடிவாங்கியும் நீ திருந்தலியா?.. என்ன கவிதை அது சொல்லு.. நானும் கொஞ்சம் கேக்கறேன்"
"சொல்றேன் மச்சி.. சொல்றேன்.."

நீ என்னை
செருப்பால் அடித்ததுகூட வலிக்கவில்லை
ஆனால் - அப்போது அழுக்கான உனது
கால்களை துடைத்துவிட
என்னைப்போல் ஒருவன் வரமாட்டன் - என்று
நினைக்கும்போதுதான் வலிக்கிறது..

"வாழ்க உன் காதல் மச்சி.. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.. நான் கிளம்பறேன்.."

| | 1 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 5



சொந்த வீடு - தொடர் பதிவு - 1
சொந்த வீடு - தொடர் பதிவு - 2
சொந்த வீடு - தொடர் பதிவு - 3

சொந்த வீடு - தொடர் பதிவு - 4

"நோ மிஸ்டர் ஆனந்த். வி வில் மேக் இட் போர் 30 லாக்ஸ்". இதையேதான் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன். ஆனந்திடம் பேசியதிலிருந்து அந்த வீடு நமக்குதான் என்று முடிவு செய்துகொண்டேன். மேலும் இரண்டு முறை அம்மாவயும், நான் கல்யாணம் செய்யப்போகும் பெண்ணையும் கூப்பிட்டு சம்மதம் வாங்கிவிட்டுதான் இந்த முடிவை எடுத்தேன். ஆமாம் இரண்டு
பேருடைய சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்.

"ஓகே. வென் டூ யு வான்ட் டு புட் தி சேல் அக்ரிமென்ட்" என்ற வார்த்தை நான் நினைத்து பார்த்திராத ஒன்று.

"டுமாரோ இஸ் தர்ஸ்டே, வி வில் டூ இட் ஆன் பிரைடே" என்று எழுந்து கை குலுக்கிவிட்டு நடந்து வந்தேன். ஏதோ பெரிய பிஸினெஸ் பேசிவிட்டு வருவது போல் ஒரு கெளரவம்.

அந்த காலத்தில் கையில் துண்டு போட்டு பேசிக்கொண்டதை, இன்று நாம் ஒரு பெஞ்ச் போட்டு உட்காந்து பேசிக்கொள்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது திடீரென்று வந்த ஒரு நினைவு  நெஞ்சத்தில் பாரமாய் இறங்கியது. அதை இறக்கி வைக்க சரியான ஆள் ஒருத்திதான். அவளிடம் இப்போது பேச முடியாது என்று நன்றாக தெரியும். இரவு வரை காத்திருக்க வேண்டும்.

"எல்லாம் கனவு மாதிரி இருக்குடா. எல்லாம் சரியா வருமில்ல" என்ற அம்மாவின் வார்த்தையில் அவ்வளவு உண்மை இருந்தது. பெங்களூரில் வீடு, அதுவும் நமக்கு மிகவும் பிடித்தமாதிரி இடத்தில அமைவது என்பது கிட்டத்தட்ட கனவுதான். நடந்துகொண்டிருப்பதால் இது நிஜம்தான் என்று உறுதிப்படுடத்திக்கொண்டேன்.

"எல்லாம் நல்ல நடக்கும்மா. நான் ராத்திரி அவகிட்ட பேசறேன். நீ ஒன்னும் கவலைப்படாத" என்று அவளை சமாதானப்படுத்தினேன்.

எனக்கும் அவளுக்கும் நிச்சயம் ஆகி இரண்டு மாதம்தான் ஆகியிருந்தது. இந்த இடைவெளியில் இவ்வளவு நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம். அனால் நாங்கள் இருவரும் எங்கள் பெற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால், தினமும் பேசிக்கொள்ளும்போதுகூட வாழ்கை எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் அதிக நேரம் செலவிடுவோம். காதல் மனதில் இருப்பதால் அதை வெளிப்படுத்தி நேரம் வீணடிப்பதில் எங்களுக்குள் உடன்பாடு இல்லை. இன்று இரவு பேசப்போகும் நேரம் மிகவும் முக்கியமானது என்பது இருவருக்கும் தெரியும்.

வழக்கமாய் நான்தான் அவளுக்கு போன் செய்வேன். இன்றைக்கும் அதுதான் வழக்கமானது.

"ஹலோ. ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்ற கேள்வியில் நான் செய்த தவறை மெதுவாய் மறைக்க முயற்சித்தேன்.

"ஹ்ம்ம். இன்னிக்கு பேசனும்னு சொல்லிட்டு ஏன் இவ்வளோ லேட் பண்ணிட்டீங்க"

"இல்லமா. ஆபீஸ்லேந்து வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சி. வந்து சாப்டுட்டு உடனே உனக்கு போன் பண்றேன்."

"சரி சரி. இன்னுக்கு சாயங்காலம் அம்மா கிட்ட பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தாளே. அம்மாவுக்கு வீடு ரொம்ப புடிச்சிடுத்தா?"

"ஆமாம். இனி நீதான் வந்து பாத்துட்டு முடிவு பண்ணனும். உனக்கு புடிச்சிருந்தாதான் முடிகப்போறேன்"

"ஐயோ. நான்தான் அன்னிக்கே சொன்னேனே. உங்களுக்கு புடிச்சிருந்தா எனக்கு புடிச்சாமாதிரின்னு"

"அப்படி இல்லமா. நீ வந்து ஒருவாட்டியாவது பாக்கவேனாமா"

"அதெல்லாம் அப்பறம் வந்து பாத்துக்கலாம். என்ன சொல்லிட்டு வந்தீங்க ஆனந்த்கிட்ட"

"போய் பேசி ஒருவழியா 30க்கு முடிவுபண்ணிட்டேன். ஆனா எப்படி சமாளிக்கப்போறோம்னு நினைச்சாத்தான் பயமா இருக்கு."

"எதுக்குங்க இவ்வளோ டென்ஷன். நான் சப்போர்ட்டுக்கு இருக்குறவரைக்கும் நீங்க இப்படி டென்ஷன் ஆகக்கூடாது" என்ற அவளின் வார்த்தை, என் மனதில் இருந்த பாரத்தை முழுவதுமாய் இறக்கியது.

"இல்லமா. வரும்போதே உனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கறேனோனு ஒரு தயக்கம். அதான்" என்றவுடன் அவளிடம் ஒரு அமைதி.

"இருக்கியா. ஏன் பேசவே மாட்டேங்கற"

"நீங்க அப்படி பேசினது எனக்கு கஷ்டமா இருக்கு. இவ்வளோ நாளா நாம இதப்பத்திதானே பேசியிருக்கோம். இப்போ வந்து இந்தமாதிரி கேட்டா எப்படி" என்ற அவளது உரிமை என்னை திணறடித்தது.

" சரி சரி . சாரி . இனிமே அப்படி பேசமாட்டேன். போதுமா"

"ஹ்ம்ம். நீங்க போய் மொதல்ல அக்ரிமென்ட் போட்டுட்டுவாங்க. நான் இந்த சாட்டர்டே வந்து பாக்கறேன்"

"அப்போ முடிச்சிடலாம்னு சொல்றியா?"

"இன்னும் என்ன யோசனை. அம்மா அப்பாவுக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கு புடிச்சிருக்கு. இதுக்குமேல என்ன வேணும்?"

"இல்லாமா. நீயும் ஒருதடவ வந்து பாத்துட்டா..."

"மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. நமக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். எனக்கு தூக்கம் வருது. குட் நைட்" என்று வைத்துவிட்டாள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், என்பது என் வகையில் சரியாயிருந்தது. பாரம் இல்லாத மனதுடன் நிம்மதியாய் படுத்து உறங்கினேன்.

அந்த வெள்ளிகிழமை சேல் அக்ரிமென்ட் போட்டதிலிருந்து தொடங்கிய குழப்பம். எந்த பாங்கில் லோன் வாங்குவது? லோன் வாங்குவதில் என்னென்ன செய்யவேண்டும்? என்பது போன்ற நியாமமான குழப்பங்கள்தான். இருந்தாலும் இவைகளை ததீர்த்தாக வேண்டும்.
எப்படி தீர்கப்போகிறோம் என்பதில் தொடங்கியது அடுத்த கவலை.

தொடரும்...

| | 0 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 4



சொந்த வீடு - தொடர் பதிவு - 1
சொந்த வீடு - தொடர் பதிவு - 2
சொந்த வீடு - தொடர் பதிவு - 3

"மாமி. இந்த பிளாட் கட்டி எத்தன வருஷம் ஆறது"
"ஒரு வருஷம் மேலே ஆயிடுத்து. இந்த பிளாட்டுக்கு நிறையபேர் வந்து பாத்துட்டு போன. யாருக்கு அதிஷ்டம் இருக்கோ அவாளுக்கு தானே கிடைக்கும்", என்ற மாமியின் வார்த்தையில் உண்மை இருக்குமோ என்று தோன்றியது.
"பாக்கலாம் மாமி. எப்படியும் 35 லக்ஷம் சொல்லுவான். அதுக்குமேல இந்த ரெஜிஸ்ட்ரேசன் வேற. அவ்வளோ எல்லாம் என்னால இபோதைக்கு முடியாது".
"ஐயோ. இல்ல இல்ல. இது 32 தான் சொல்றன். கொஞ்சம் பேசினா முப்பதுக்கு முடிக்கலாம்", என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவ்வளவு நல்ல பிளாட், ஓரளவுக்கு இல்லை, நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அருமையான இடம். சமாளிக்க முடியும் என்ற விலை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இதை எப்படியும் முடிக்க வேண்டும் என்று தோன்றியது.
"மாமி, இந்த பர்னிச்சர் எல்லாம் அவன் எடுத்துண்டு போகலியா"
"இல்ல இல்ல. இதெல்லாம் சேத்துதான் பிளாட்".
என்னது, கரும்பும் தின்ன கொடுத்து, அதுக்கு கூலியும் கொடுக்கறான்களா, என்ற எண்ணம்தான் என் மனதில் ஓடியது.
"ஓ. அப்படியா. நல்லா இருக்கு மாமி. கிடைச்சா உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்று மாமியிடம் பேசிக்கொண்டே, அம்மாவின் முகத்தை பார்த்தேன். இதுவரையில் நான் பார்த்திராத அப்படி ஒரு தெளிவு.
"கிடைக்கும். நீ பொய் மொதல்ல அவனுக்கு போன் பண்ணு. கீழ வா. நம்பர் தரேன்" என்று எங்களை கூட்டிகொண்டு கீழே இறங்கினாள் மாமி. ஒருவித பயம் கலந்த பதற்றத்துடனே நாங்கள் பின் தொடர்ந்தோம்.

அவர்களிடம் நம்பர் வாங்கி போன் செய்யலாம் என்று முயன்ற போது, அம்மா பின்னாலிருந்து,
"டேய், யாருக்கு போன் பண்ற. நாகேஷுக்கா இல்ல ஆனந்துக்கா", என்று விசாரித்தாள்.
"மொதல்ல ஆனந்துக்குதாம்மா போன் பண்றேன். மாமி அவர்கிட்டதான் மொதல்ல பேச சொன்னா", என்று சொல்லிவிட்டு அந்த சீட்டில் இருந்த நம்பரை டயல் செய்தேன்.

"ஹலோ. ஆம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ்டர் ஆனந்த்"
"எஸ் ஸ்பீக்கிங்", என்றதும் என் படபடப்பு கூடியது.
"சார். ஐ யம் காலிங் ப்ரம் அரிக்கேரி. ஐ ஹாவ் ஜஸ்ட் சீன் யுவர் பிளாட் இன் தேர்", என்றதும் அவருக்கு புரிந்து விட்டது.
"கேன் யு கம் ஓவர் டு மை ஆபீஸ் டுமாரோ", என்றவரிடம்
"சார், டுமாரோ இஸ் டியூஸ்டே, ஐ வில் கம் ஆன் வெட்னெஸ்டே" என்று கூற,
"ஓகே. ஆஸ் யு விஷ். டேக் டௌன் மை அட்ரஸ்" என்று அட்ரசை சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
அவசர அவசரமாய் வெளியில் ஓடி வந்த அம்மா
"என்னடா ஆச்சு" என்று ஆர்வமாய் கேட்டாள்.
"நேரா வந்து பேச சொன்னாரும்மா"
"எப்போ போகப்போற"
"வெட்னெஸ்டே வரேன்னு சொல்லிருக்கேன்", என்று சொல்லிவிட்டு, என் ரூமை நோக்கி சென்றேன்.
"சரி. இன்னைக்கு சும்மா பேங்க்ல போய் கேட்டுண்டு வாடா."
"சரிம்மா. எனக்கு டைம் கிடைச்சா போறேன்" என்று சொல்லிவிட்டு, கிளம்ப தயாரானேன். என் மனதில் முழுவதும் அந்த வீட்டின் ஞாபகம்தான்.

ஆர்வம் அதிகமானதால், அன்றே ஒரு பாங்கில் போய் தேவையானவற்றை தெரிந்துகொண்டேன். நான் எப்பவும் இவ்வளவு சீக்கிரத்தில் எந்தவிஷயதையும் போய் விசாரித்ததில்லை. இது நடக்கிறது என்றால் உள்ளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் தள்ளிகொண்டிருகிறது என்றுதான் அர்த்தம். அது நிச்சயம் அந்த வீடு தான் என்று எனக்கு தெரியும். நாளை காலை எழுந்து சீக்கிரம் தயாராகி அந்த ஆனந்தை போய் பார்க்கவேண்டும் என்பதால், சீக்கிரமே உறங்கிவிட்டேன்.

"டேய், சீக்கிரம் ரெடியாகு. கிளம்பறதுக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ணிட்டு கிளம்பு" என்று அம்மா அவள் பங்குக்கு கொஞ்சம் கூற, ஏற்கனவே என் மனதில் என்னென்ன கேட்க வேண்டும் என்று பட்டியல் போட்டுகொண்டதை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன்.

"சார். ஐ யம் காலிங் ப்ரம் அரிக்கேரி" என்று ஆரம்பித்தவுடன் அவருக்கு புரிந்துவிட்டது," எஸ், ஐ அம் வைடிங்  பார் யு" என்று பதில் வந்தது.


"சரிம்மா. அவருக்கு போன் பண்ணிட்டேன்.ரெடி யா இருக்காராம். நாங்க கிளம்பறோம்." என்று அவள் கையில் வைத்திருந்த தோசையை பிய்த்து இரண்டு வாய் போட்டுகொண்டு,"வாப்பா" என்று அப்பாவை அழைத்தேன். அப்பா வழக்கம் போல் பின்னாடி வேட்டியை மடித்துக்கொண்டு உட்கார,வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இன்னும் உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பு. அகலக்கால் வைக்கிறோமோ , சமாளிக்க முடியுமா, இடம் நல்ல இருந்தாலும் வில்லங்கம் ஏதும் இருக்ககூடாதே, எல்லாம் சரியாகி வந்தால் பாங்கில் லோன் சீக்கிரம் கிடைக்கணுமே.. இவ்வளவு கேள்விகளுடன் வண்டி ஓட்டுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இத்தனையையும் தாண்டி ஒரு வேகம். இவன் எப்போதும் இப்படியே தான் இருப்பான் என்று நினைத்தவர்களிடம், இப்படி இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒரு வைராக்கியம். விதி சிலநேரத்தில் இப்படியும் நமக்கு நல்லது செய்கிறது. மதில் சுவர் இல்லாத கோட்டையை கட்டத் தொடங்கிவிட்டேன். முடித்துவைக்க இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில்.

தொடரும்..

| | 0 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 3





"சார், நான் முனியப்பா பேசுது சார். இன்னா ஆச்சுங்க சார். வரலியா?" என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றாலும், முனியப்பாவை எப்படியாவது சமாளிக்க வேண்டும். 

சொல்லியிருந்தபடி நாங்கள் போகாததால் எனக்கு இந்த தண்டனை. அந்த வீட்டை பேசி முடிப்பதற்கு, இவனிடம் பேசி சமாளிப்பது எவ்வளவோ மேல்.

"இல்ல சார். இப்போ கொஞ்சம் ப்ராப்ளம். அதான் வர முடியல. வி வில் ஸீ நெக்ஸ்ட் டைம் சார்." என்று ஏதோ மழுப்பினேன்.

"சார், மனி ப்ராப்ளம்னா சொல்லுங்கோ சார். நம்ம பேங்க்தான். ஈஸியா மாடிகொட்த்தினி சார்".

"இல்ல சார். சாரி, ஐ வில் கால் யு நெக்ஸ்ட் டைம்." என்று போனை வைத்துவிட்டேன். அடுத்தடுத்து வந்த அவனது போன் கால்களை எடுக்கவே இல்லை.

இப்படியே ஒரு இரண்டு வாரம் ஓடி இருக்கும். வாரக்கடைசியில் போய் வீடு தேடுவதை கொஞ்சம் நிறுத்திவைத்திருந்தேன். ஒரு திங்கட்கிழமை காலையில் வழக்கம் போல் மெதுவாக எழுந்து, 
குளித்து வருவதற்குள் மணி 11 தாண்டி இருந்தது. 

" அம்மா, கஞ்சி ரெடியா", என்று கேட்டுகொண்டே சமையற்கட்டில் நுழைய, அம்மாவை அங்கே காணவில்லை.

" பாட்டி அம்மாவ பாத்தியா"? என்று கேட்டுக்கொண்டே வாசலில் போய் பார்க்க, யாரோ ஒருவருடன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டு வருவது தெரிந்தது.

"கோவிலுக்கு போனாடா, இன்னும் வரல" என்று பாட்டி பின்னாடி வந்து நின்றாள்.

"இதோ வந்துட்டா பாட்டி. கூட யாரோ பேசிண்டு வரா, அதன் லேட்டாயிருக்கும்".

"பின்னாடி தெருல இருக்காளே அந்த மாமி மாதிரி இருக்கு. இப்போ கூட அவா புள்ளைக்கு கல்யாணம் ஆச்சே", என்று பாட்டி அவர்களின் புராணம் கூற, அதில் எனக்கு விருப்பம் இல்லாததால் 
உள்ளே சென்று விட்டேன்.

"என்னடா. கஞ்சி எடுத்துன்டியா. கொஞ்சம் லேட் ஆயிடுத்து." என்று அம்மா அவசரமாய் சமையற்கட்டில் நுழைய, நான் பின்னால் போய் "
யாரும்மா அது. புதுசா ஒரு ப்ரண்டா" என்று கிண்டல் செய்தேன்.

"இல்ல டா. ரொம்ப நாளா இந்த மாமி கோவிலுக்கு வருவா. இன்னிக்குதான் பேச சந்தர்ப்பம் கிடைச்சுது.
அவா புள்ளைக்கு இப்போதான் கல்யணம் ஆயிருக்கு, இங்க பக்கத்து தெருலதான் இருக்காளாம். அவன் கூட உன் கம்பெனில தான் வேல பாக்கறானாம்"

"அப்படியா, சரி எனக்கு கஞ்சி தா, பசிக்கறது" என்று சொல்லிவிட்டு, எப்போதும் போல் லேப்டாபில் உட்காரபோனேன், அவசரமாய் பின்னல் வந்த அம்மா, 
"டேய், முழுசா கேட்டுட்டுப் போ" என்று ஏதோ சொல்ல வந்தாள்.

"என்னம்மா, எனக்கு வேல இருக்கு. சீக்கிரம் சொல்லு " என்று வெறுப்புடன் கூறினேன். அவர்களின் கதையை மேலும் கேட்க எனக்கு விருப்பம் இல்லை.

"அவா இப்போ இருக்குற அபார்ட்மென்ட்ல ஒரு வீடு காலியா இருக்காம். வந்து பாக்கறேளானு கேட்டா" 

"நாளைக்கு போலாம் மா, இன்னைக்கு எனக்கு நிறைய வேல இருக்கும்மா"

"டேய், சும்மா எப்போபாத்தாலும் அதுலயேதான உக்காந்திருக்க. எழுந்து வா, இங்க தானே, போய் பாத்துட்டு வரலாம். நல்லா இருந்தா பாக்கலாம், இல்ல, புடிக்கலனா வந்துடலாம்"  
என்ற அம்மாவின் வார்த்தைக்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

"சரி வா போலாம்", என்றார் அரைமனதுடன் தயாரானேன்.

"மொதல்ல அந்த மாமியாதுக்கு போலாம், மாமி வந்து சாவி வாங்கித்தரேன்னு சொல்லிருக்கா"

"நான் மாமியாத்துகெல்லாம் வரல. நீவேனா போய் சாவி வாங்கிண்டு வா" என்று சொல்லிக்கொண்டே அவளது முகத்தை மட்டும் பார்த்தேன். திட்டு வாங்கபோவது மட்டும் உறுதி என்று 
தெரிந்தது.

நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்க்கு அருகில் என்பதால் நடந்தே போனோம். இந்த அபார்ட்மென்ட் கட்டத்தொடங்கும் போதெல்லாம், இப்படி ஒரு அபார்ட்மென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் 
என்று நாங்கள் சொல்லிகொள்வோம். நாங்கள் இருக்கும் அந்த காலனி ரொம்பவும் அமைதியானது. பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், என்று எல்லா இடத்திற்கும் பஸ் வசதி உண்டு. 
ஆகையால், இந்த இடத்தில் வீடு கிடைத்தால் அதில் எல்லாருக்கும் ரொம்பவும் சந்தோஷம்.

"என்னடா யோசிச்சிண்டு வர." என்ற அம்மாவின் கேள்வியில் கனவு கலைந்தேன்.

"இல்லம்மா, இந்த பிளாட் இப்போதானே கட்டினா. நம்ம கூட எவ்வளோ சொல்லுவோம். இந்த பிளாட் சூப்பரா இருக்கு, கிட்டயே இருக்குனு. அதத்தான் யோசிச்சிண்டு வந்தேன்".

"ஆமான்டா, நல்ல பிளாட். கிடைச்சா நல்லாத்தான் இருக்கு. யோகம் இருந்தா கிடைக்கும். இரு, நான் போய் மாமிய பாத்து கூட்டிண்டு வரேன்" என்று கூறி உள்ளே நுழைந்தாள். 
செக்யூரிட்டி குறுக்கிட்டதால், அவனிடம் அந்த மாமியின் பெயரை சொல்லவேண்டியதாயிற்று.

"வாப்பா, மேல வா. நீ கூட என் புள்ள வேல பாக்கற கம்பெனிலதான் இருக்கியாமே. அம்மா சொன்னா" என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கி வந்தாள் , அம்மா சொன்ன அந்த மாமி.

அதற்குள் நான் அந்த அபார்ட்மென்ட்டை நன்றாக ஆராய்ந்துவிட்டேன். நான்கு மாடிகள். அதிகபட்சம் 16 வீடுகளுக்குமேல் இருக்காது. ஜென்ரேடர் இருந்தாதால், லிப்ட் கண்டிப்பாக இருக்கும் 
என்று யூகித்து கொண்டேன். கீழே எல்லா கார்களும் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்தது. ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தது. இது கிடைத்தால் நன்றாக 
இருக்கும் என்று ஆசை தோன்ற ஆரம்பித்தது.

"இது ஒண்ணுதான் காலியா இருக்கு. உங்களுக்குதான் அதிஷ்டம்னு நினைக்கறேன்" என்று அந்த மாமி சொல்லிக்கொண்டு வருவதற்குள் இரண்டாவது மாடி வந்து விட்டது. லிப்டில் இருந்து இறங்கும் போதே 
அந்த அபார்ட்மென்ட் வீட்டின் கதவை திறந்து வைத்திருந்தான் செக்யூரிட்டி.

"வாங்கோ மாமி. நீங்க பாத்துண்டு இருங்கோ. நான் இப்போ வந்துடறேன்" என்று ஏதோ அவசர வேலையாய் அந்த மாமி கீழே போக, இதில் மட்டும் என்ன புதுசா இருக்கப்போது என்று 
எண்ணிக்கொண்டே, உள்ளே சென்று நிமிர்ந்து பார்த்த எனக்கு ஆச்சர்யம்.

தொடரும்...

| | 1 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 2



"இன்னா சார், மனே சென்னாகித்தா?", முழுவதுமாய் பார்த்து முடித்த பின்னர் அவன் எங்களிடம் கேட்ட வார்த்தை. நாங்கள் இதுவரையில் பார்த்த அபார்ட்மென்ட் வீடுகளில் இது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது.

"நல்லா இருக்கு சார்", என்று பொய் கூறினேன். எனக்கு என்னவோ பரவாயில்லை என்று தான் தோன்றியது. அனால் அப்பாவுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று மட்டும் புரிந்தது.

"என்னப்பா, எப்படி இருக்கு. உனக்கு புடிச்சிருக்கா?".

"நல்லா இருக்கு டா. கொஞ்சம் சின்னது தான். ஆனாலும் நல்ல களையா இருக்கு. அதுமட்டும் இல்லாம, பஸ் ஸ்டான்ட் வேற பக்கத்துலையே இருக்கு. எதாவது ஆத்தர அவசரம்னா, சௌகரியமா இருக்கும்", என்று அப்பாவின் எண்ணங்கள் பரந்து விரிவதை என்னால் யூகிக்க முடிந்தது.

"சரிப்பா, அதுக்காக பாத்தோம்னா, அஞ்சு மாடி ஏறனுமே. பாட்டிக்கு ரொம்ப கஷ்டம் பா, அவ சும்மாவே வீட்டுக்குள்ள இருக்க மாட்டா. இதுல தினமும் அஞ்சு மாடி ஏறி இறங்கனும்னா, ரொம்ப கஷ்டம் பா. எனக்கு என்னவோ கொஞ்சம் யோசிச்சி பண்ணலாம்னு தோணுது".
நாங்கள் பேசிகொண்டிருப்பதை கேட்ட முனியப்பா, " சார், 24 ஹவர்ஸ் லிப்ட் இதே சார். ஏன்னு டென்ஷன் இல்லா சார்" என்றான்.
" லிப்ட எப்படிங்க நம்பறது. திடீர்னு எதாவது ப்ராப்ளம்னா, கஷ்டம் ஆயிடும் சார்".
" டேய், இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லி, வேண்டாம்னு சொல்லாதடா, அம்மாவை கூட்டிட்டு வந்து பாக்கலாம்", என்று அப்பா கூறியதும்,எனக்கு சிறிது பயம். எங்கே இந்த வீட்டையே முடித்துவிடலாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் தான். அப்படி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வீடு இல்லை என்பதால், என் மனதில் சிறு நெருடல் இருந்தது.
" இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு தோணுது" என்பதற்குள், முனியப்பா வந்து ஏதோ கன்னடத்தில் பேச ஆரம்பித்தான். அங்கிருந்து அப்பாவை எப்படியாவது கூட்டிகொண்டு போகவேண்டும் என்பதால்

" சரி சார், நாளைக்கு அம்மாவை கூட்டிட்டு வரோம். அவங்கதான் வீட்ல இருக்க போறாங்க. அவங்களுக்கும் புடிக்கனும்னு பாக்கறேன்." என்று சொல்லி, படிக்கெட்டில் இறங்க, முனியப்பா பின்னாடி ஓடி வந்து, " சார், பிளகே ஹத்து கன்டகே பன்னி சார்", என்று சொன்னவனிடம், சரி என்பதுபோல் மண்டையை ஆட்டிவிட்டு, காரை கிளப்பினேன். எப்போதும் முதல் கியர் விழுந்ததும் நின்றுவிடும் எனது கார், அப்போது மட்டும் விர்ர்ர் என கிளம்பியது.

"என்னடா, வீடு எப்படி இருக்கு " என்று அம்மா வாசலிலேயே கேட்டுக்கொண்டு நின்றாள்.
"பரவாயில்லைமா, கொஞ்சம் யோசிச்சி முடிவு எடுக்கணும்னு தோன்றது".
"சும்மா இருடா. அவளும் பாக்கட்டுமே. அதுக்குள்ள அவள மூட் அவுட் பண்ணாத" என்று அப்பா என்னை அதட்டிவிட்டு, அம்மாவிடம், " நாளைக்கு வரோம்னு சொல்லிட்டு வந்திருக்கோம்மா. காலைல பத்து மணிக்கு எல்லாரும் போய் பாக்கலாம்", என்று அவளின் ஆசையையும் கொஞ்சம் தூண்டி விட்டார் அப்பா.

இவர்கள் பேசுவதை பார்த்தால் நாளைக்கு பேசி முடித்து விடுவார்கள் என்று தோன்றியது. அப்படி ஆகாது. ஏனென்றால் அம்மா அவ்வளவு சீக்கிரம் எதையும் சரி என்று சொல்லிவிடமாட்டாள்..
அந்த தைரியத்தில் பலதும் மனதில் ஓடிகொண்டிருக்க

"சீக்கிரம் மூஞ்சி அலம்பிண்டு வாடா, காரக்கொழம்பும் உருளகிழங்கும் பண்ணிருக்கேன். பாட்டிக்கும் பசிக்கரதுன்னு சொன்னா. இதெல்லாம் அப்பறமா பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு அம்மா அவளது வேலையை பார்க்க சென்றாள்.

எப்படியும் சாப்பிடும் போது இதைதான் பேசப்போகிறோம் என்று எனக்கு தெரியும். அதனால்தான் நான் விஷயத்தை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தேன்.

"அம்மா ஆபீஸ்ல நேத்து ஒருத்தர் கூட பேசினேன்மா. இங்க ஜிகினி பக்கத்துல காலி பிளாட் எல்லாம் கம்மி விலைல கிடைக்குதாம்மா. சொந்த வீடு கட்டி போனா சூப்பரரா இருக்கும் இல்ல".
ஆமாம்,  சொந்த வீடு கட்டிக்கொண்டு போக வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் கனவு.

"என்னடா சொல்ற. எவ்வளோ சொல்றாளாம்" என்று அம்மா ஆர்வத்துடன் கேட்டாள். இது போதும் எனக்கு, இப்போது பார்த்துவிட்டு வந்த வீட்டை கைகழுவுவதர்க்கு.

தொடரும்...