இசையாய்....
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Thursday, December 30, 2010 | 0 - கருத்துரை
Labels: ஆதாம் கவிதைகள்
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Thursday, December 30, 2010 | 0 - கருத்துரை
Labels: மெட்டு பழசு.. பாட்டு புதுசு
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, September 28, 2010 | 4 - கருத்துரை
இது உங்களை இசையமைப்பாளராக்கும் ஒரு சிறு முயர்சிதான். பாட்டுக்கு மெட்டு போடுவது கொஞ்சம் கடினமான காரியம். இதோ பாட்டு, எங்கே உங்கள் மெட்டு ???!!!!
பல்லவி
ஊத்திக்கொடு மச்சான்
ஊத்திக்கொடு மச்சான்
ஊருகாய கொஞ்சம் சேத்துக்கடிடா
சேத்து வெச்சேன் கவலை
தீத்துப்புட்டான் சகலை - இவன்
குவாட்டருக்கு பொறந்த தெய்வமகன்டா
சேர்ந்து குடிச்சி போவோமே நாங்க
ஊருக்குள்ள தேரு போலத்தான்
மயங்கி விழுந்து மல்லாக்க படுப்போம்
சூரியன் விழிப்பான் எங்க மூஞ்சிலத்தான்
சரணம் - 1
காலையில் தினமும் கால் பாட்டில் அடிச்சா
நாளெள்லாம் இருக்கும் ரொம்ப லைட்டா
மாலை மயங்கும் மப்பு ஏற குடிச்சா
ராவெல்லாம் இருக்கும் செம்ம டைட்டா
கை நெறையா காசு இருந்தா
கவர்ச்சி பாரு இருக்குது
கொஞ்சம் கஷ்டமாயி போச்சுதுன்னா
கவர்மெண்ட் கடை இருக்குது
கட்டிங் அடிச்சி கொத்து உட்டா
வருது பாரு வாந்தி
பிட்டிங் இல்லா வாழ்கை மாறும்
கரைய சேரு நீந்தி
(ஊத்திக்கொடு மச்சான்)
சரணம் - 2
ஓசியில ஊத்திகிட்டா ஒன்னாம் பெக்குல ஜோரு
கடைசியில பில்லு வந்தா பிச்சிகிட்டு ஓடு
ராசியில்லா குடிமகனாய் நீ இருந்த பாரு
எம்சி தந்த வாழ்கையில அதயே தினம் நாடு
ஃபுல்லு கூட பீரு சேர்ந்தா
அப்போதைக்கு அப்பீட்டு
கள்ளு குடிச்சி போதை வந்தா
எப்பவுமே ரிப்பீட்டு
முழு பாட்டில் வாங்கி வெச்சு
மூடி சிக்குனா போச்சு
வாழ்கைய நீ வாழ்ந்து காட்டு
சும்மா என்ன பேச்சு
(ஊத்திக்கொடு மச்சான்)
Labels: பாட்டு இங்கே - மெட்டு எங்கே
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Monday, September 27, 2010 | 0 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, September 07, 2010 | 5 - கருத்துரை
”நேத்து எப்போடா வீட்டுக்கு வந்த ?” - அம்மாவின் கேள்வி சந்தேக தொணியில் இருந்தது.
“அது வந்து அம்மா” என்பதர்க்குள்ளாக அவளின் இரண்டாவது கேள்வி என்னை புரட்டிப்போட்டது.
“குடிச்சிட்டு வந்தியா?”
“அம்மா. என்ன அம்மா இப்படி கேக்கற. நான் ஏம்மா குடிக்கப்போறன்”
“அப்போ அந்த பாட்டில் எப்படி உன்னோட கார் டிக்கில வந்துச்சு?” என்று அவள் கேட்ட போதுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.
“அம்மா. அந்த விஷயம் பத்தி பேசலாம்னு தான் காலைல வந்ததும் உன் ரூமுக்கு வந்தேன். நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அதான் அப்பறம் சொல்லலாம்னு இருந்தேன்.”
“என்னடா விஷயம். எதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. நேத்து ராத்திரி நான் லாஸ்ட் கஸ்டமர வீட்ல விட்டுட்டு வரும் போது ஒரு சின்ன ஆக்ஸிடண்ட். ஒரு பையன் கார் முன்னாடி வந்து விழுந்துட்டான். அவன கொண்டுபோய் ஆஸ்பதிரில சேத்துட்டு கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வந்தேன். அதான் லேட் ஆயிடிச்சி.”
“அப்போ அந்த பையனுக்கு என்ன ஆச்சி?”
“ஒன்னும் இல்லமா, சின்ன காயம்தான். ஆனா ஆஸ்பத்திரில சொன்ன விஷயத்த கேட்டுட்டுத்தான் ரொம்ப சங்கடமா போச்சு.”
“என்னடா சொன்னாங்க? அந்த பையனுக்கு என்னவாம் ?”
“அதுவந்தும்மா, அந்த பையனுக்கு லிவர் கெட்டுப்போச்சாம்”
“என்னாடா சொல்ற, எப்படி?”
“அம்மா, அந்த பையன் ரொம்ப குடிப்பான் போலருக்கு, அதான் இப்படினு டாக்டர் சொன்னாரு. யாருகிட்டயும் சொல்லாம இருந்திருக்கான் போலருக்கு.”
“அய்யோ பாவம். அவங்க வீட்டுக்கு போன் பண்ணினியா? இப்போ அவன் கூட யாரு இருக்கா?”
“அவங்க அப்பாவுக்கு போன் பண்ணினேன், அவரு அங்க வந்த்ததும் தான் நான் கிளம்பி வந்த்தேன்”
“சரி. யாரு பெத்த புள்ளயோ, நால்லா இருக்கட்டும். நீ இன்னைக்கு எப்பொவாவது அந்த பக்கம் போனைனா அவன ஒரு வாட்டி போய் பாரு.”
“சரிம்மா. நான் கொஞ்ச நேரம் போய் தூங்கரேன்.” என்று சொல்வதர்க்குள்ளாக யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
“இரும்மா, நான் பாக்கறேன்” என்று கதவை திறந்த போது அங்கு நின்றுகொண்டிருந்தது அந்த பையனின் அப்பா.
“என்ன சார். ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல தம்பி. அவன் இப்போ கண்ணு முழிசிட்டான். நீங்க மட்டும் இல்லனா அவன நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது. தம்பி நீங்க என்ன வேலை செய்யறீங்க”
“நான் கால் டாக்ஸி டிரைவர் சார். நேத்து ராத்திரி நான் லாஸ்ட் கஸ்டமர டிராப் பண்ணிட்டு வரும் போது தான் உங்க பையனை இடிச்சிட்டேன். நான் இடிச்சதுல காயம் பட்டுதான் ரத்தம் வருதுனு ரொம்ப பயந்த்துட்டேன் சார். ஆனா, டாக்டர் கிட்ட விசாரிச்சப்பரம்தான் தெரிஞ்சது உங்க பையனுக்கு இப்படி ஒரு வியாதினு. டாக்டர் என்ன சார் சொன்னாரு”
“இப்போவே கண்டுபிடிச்சது ரொம்ப நல்லாதாபோச்சுனு சொன்னாரு தம்பி. மறுபடியும் சொல்றேன், நீங்க மட்டும் இல்லனா அவன நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது. இதுக்கு நான் ஏதாவது கைமாறு செய்யனும் தம்பி.”
“அதெல்லாம் வேணாம் சார். உங்க பையனை நல்லபடியா கவனிச்சிக்குங்க”
“இல்ல தம்பி. நீங்க ஓட்டுறது உங்க சொந்த வண்டியா?”
“இல்ல சார். பேங்க் லோன்ல தான் வாங்கிருக்கேன்.”
“தம்பி. இனிமேல் இது உங்க சொந்த வண்டி. அந்த பேங்க் டாக்குமெண்ட்ஸ் மட்டும் குடுங்க, மத்தத நான் பாத்துக்குறேன்.”
“அய்யாயோ. நான் இதெல்லாம் எதிர்ப்பார்த்து செய்யால சார்.”
“அது தான் தம்பி இந்தக்காலத்துல இல்ல. நான் இந்த உதவிய உங்களுக்கு செய்தே ஆகனும். அதுதான் நீங்க செஞ்ச உதவிக்கு நான் செய்யற நன்றிக்கடன்.” என்ற சொல்லைக்கேட்டு நான் செய்வதறியாது நின்றேன்.
Labels: சிறுகதை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Friday, September 03, 2010 | 5 - கருத்துரை
Labels: ஆதாம் கவிதைகள்
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Thursday, September 02, 2010 | 3 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Wednesday, September 01, 2010 | 4 - கருத்துரை
கிருஷ்ணன் பொறந்தது
கிருஷ்ண ஜெயந்தி
காந்தி பொறந்தா
காந்தி ஜெயந்தி
அப்போ
ஜெயந்தி பொறந்தா ? !!!
சீடை முறுக்கு
அவில் வெண்ணை
இதெல்லாம்
பொறந்த குழந்தை (கிருஷ்ணன்)
எப்படிபா தின்னும் ?!!
(சாமி கண்ண குத்தாம இருந்தா சரி :-)
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, August 31, 2010 | 6 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Sunday, August 29, 2010 | 1 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Monday, August 16, 2010 | 3 - கருத்துரை
அமிலக் குடுவை மனம்
புகைக்க மறந்த வத்தி
திமிர் மறந்த நாட்களில்
தினமும் ஒரு பாடம்
சகதியில் நீராய்
கெட்டுவிட்ட புத்தி
சமத்துவம் பேசும் போது
விழித்துக்கொள்ளும் அறிவு
சந்தர்ப்பம் பார்த்து
இல்லை என்று போகிறது
முடங்கிப் போய்
மூலையில் பதுங்கும் பயம்
கண்டிப்பாய் காற்று
நம்மை நோக்கி வீசுவதில்லை
கண் பார்வையும்
பல சமயம் அப்படித்தான்
கடல் வாங்கும்
மேல் மூச்சும் கீழ் மூச்சும்
அலையாய் எனக்கு தெரியும்
பிம்பங்கள் பொய்
என்றது கண்ணாடி
மனசாட்சி உண்மையா
என்றது மனம்
மனம் ஒரு குரங்கு
என்றேன் நான் !!
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Saturday, June 26, 2010 | 1 - கருத்துரை
Labels: ஆதாம் கவிதைகள்
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, June 22, 2010 | 3 - கருத்துரை
Labels: ஆதாம் கவிதைகள்
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Saturday, May 29, 2010 | 4 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Friday, May 14, 2010 | 1 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Sunday, May 09, 2010 | 2 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Thursday, May 06, 2010 | 7 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, May 04, 2010 | 3 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Monday, May 03, 2010 | 5 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Sunday, May 02, 2010 | 1 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Saturday, May 01, 2010 | 0 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Tuesday, April 27, 2010 | 0 - கருத்துரை
| மீட்டியவன் - ருத்ர வீணை® : நேரம் : Sunday, April 25, 2010 | 1 - கருத்துரை
Diseño de FCT | A Blogger por Blog Ingeniería